வாகை சூடவாவுக்கான தேசிய விருதும் அதிமேதாவி பதிவர்களும்..

குழந்தை தொழிலாளர்களின் கல்விக்கான அவசியத்தை முன்னிலைப்படுத்தி, சற்குனம் இயக்கிய வாகை சூடவா திரைப்படம் கடந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்படத்துக்கான தேசிய விருதைப்பெற்றிருக்கிறது.இப்பொழுது தேசிய விருது தேர்வில் தமிழ்திரைப்படங்களும் ஏனைய மொழிப்படங்களோடு போட்டி போட்டு விருதுகள் வாங்குகின்றமையானது.. நல்ல தமிழ் சினிமாக்களை நேசிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்..
கடந்த முறை கூட ஆடுகளம்,தென்மேற்குபருவக்காற்று திரைப்படங்கள் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது.. இம்முறை வாகைசூடவா தவிர்த்து, சுசிந்திரனின் அழகர்சாமியின் குதிரை திரைப்படத்திற்கு சிறந்த பொழுது போக்கு படத்திற்கான விருதும், அப்படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துனைநடிகருக்கான விருதும் மற்றும் ஆரண்யகாண்டம் திரைப்படத்து சிறந்த புதுமுக இயக்குனர்,சிறந்த படத்தொகுப்பாளர் விருதுகள் கிடைத்திருக்கிறது..

வாகைசூடவா திரைப்படம் வெளியான புதிதில், நம் அதிமேதாவி பதிவர்கள் சிலர் அப்படத்தில் சொல்லவந்த விடயங்களை கருத்திற்கொள்ளாமல் சிறு சிறு குறைகளை பெரிதாக சுட்டிக்காட்டி
அது இப்பிடியில்ல.. இது அப்பிடியில்ல அது சரியில்ல இது சரியல்ல இப்பிடி வந்திருக்கலாம் அப்பிடி வந்திருக்கலாம்.. திரைக்கதை சரியில்ல.. என்றெல்லாம் சொல்லி தியேட்டருக்கு போக நினைத்த கூட்டத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்..

இதிலே முக்கியமாக ஒலகமகா சினிமா விமர்சகர் என நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவர்.. வழமையான அவரது பானியில் திரைக்கதை சரியில்ல சற்குனம் சறுக்கிவிட்டார்..குழந்தைகள் சொல்லிவிடும் அளவிற்கு  இருக்கு.. உட்கார முடியல்ல நெளிய வைக்கிறது என பீத்திக்கொண்டார்.. என்னமோ சினிமாவையும் திரைக்கதையையும் அவருதான் கண்டுபுடிச்சாரா என்ற சந்தேகம் வரும் அவரின் விமர்சனங்களைப்பார்த்தால்.. ஏனென்றால் எந்த இயக்குனரின் திரைக்கதையும் அவரை திருப்தி படுத்துவதேயில்லையாம்.. மாறாக சில மொக்கைபடங்களையும் உலகபடங்களையும் சூப்பர் என சொல்வதுண்டு..

அவரும் சினிமாவுல வேலை செய்வதாக சொல்லிக்கொள்கிறார்.. ஆனா இதுவரைக்கும் என்னத்த சாதிச்சாருன்னுதான் தெரியல்ல.. இதெல்லாம் பார்க்கும் போது வடிவேலுவின்.. "ஏய்...... நானும்,,, ரவுடிதான்" என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.. ஹய்யோ ஹய்யோ.. இவ்வாறானவர்களுக்கெல்லாம் தக்க பதிலடியாக.. வாகைசூடவா பதில் சொல்லிவிட்டது, வடநாட்டு சினிமா ஆர்வலர்களுக்கு சிறந்தது என தோன்றியது, நம்மவூர் அதிமேதாவிகளுக்கு புரியவில்லை என்பதுதான் கோபம்,வருத்தம் எல்லாமே..

இவ்வாறான பதிவுகளைப்படிக்கும் வாசகர் கூட்டம், அவர்களின் மொக்கை விமர்சனங்களை நம்பி.. "படம் பார்க்கனும்னு இருந்தேன் இப்ப முடிவை மாத்திக்கிட்டேன்" என பின்னூட்டமிடுவதுண்டு..  இன்னொருவரின் ரசனையோடு,கருத்துக்களோடு.. தன் ரசனையை மட்டுப்படுத்திக்கொள்ளும் தமிழனின் ரசனை என்னவென்று சொல்வது..!!! முதலில் தமிழன் ரசனை மாற வேண்டும்.. மாஸ் ஹீரோக்களையும் மசாலா குப்பைப்படங்களை தவிர்த்து நல்ல படங்கள், திறமையான இயக்குனர்களை வெற்றிபெற செய்யவேண்டும்..
மாஸ் ஹீரோப்படம்,மசாலாப்படம் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்றால் திருட்டி விசிடியில் அல்லது இண்டர்நெட்டில் பார்த்தால் போதும்.. என்னைப்போல.. தமிழ்சினிமா உருவப்படவேண்டும் என்றால் எதுவுமே தப்பில்ல!

59th National Awards Winners List:

Best Feature Film: ’Devur’ (Marathi) & ‘Byari’ (Kannada)
Best Director: Gurvinder Singh, ‘Anhe Ghorey Da Daan’
Best Actor: Girish Kulkarni, ‘Deool’
Best Actress: Vidya Balan, ‘The Dirty Picture’
Best Supporting Actor: Appu Kutty, ‘Azhagar Samiyin Kuthirai’ (Tamil)
Best Supporting Actress: Leishangthem Tonthoingambi Devi, ‘Phijigee Mani’ (Manipuri)
Best Editing: Praveen KL, ‘Aranyaa Kandam’
Best Child Artist: Partho Gupte, ‘Stanley Ka Dabba’ and ‘Chillar Party’ cast
Best Film on Social Issues: ’Inshallah’ (Ashvin Kumar) and ‘Mindscape’ (Arun Chadha)
Best Non Feature Film: ’And We Play On’
Best Debut Film of a Director: ’The Silent Poet’ (Manipuri)
Best Children’s Film: ’Chillar Party’
Best Music Direction: Neel Dutt, ‘Ranjana Ami Ar Ashbona’
Best Background Score: ’Laptop’, Mayookh Bhaumik
Best Singer (Female): Rupa Ganguly
Best Singer (Male): Anand Bhate
Best Lyrics: ’I Am’, Amitabh Bhattacharya
Best Screenplay (Adapted): ’Shala’, Avinash Deshpande
Best Screenplay (Original): ’Chillar Party’, Vikas Behl & Nitish Tiwari
Best Dialogue: Girish Kulkarni, ‘Deool’
Best Make Up Artist: Vijram Gaekwad, ‘The Dirty Picture’ and ‘Bal Gandharva’
Best Special Effects: ’Ra.One’
Best Costume Design: Niharika Khan, ‘The Dirty Picture’ and Neeta Lulla, ‘Bal Gandharva’
Best Choreography: Bosco-Caeser for “Senorita…” from ‘Zindagi Na Milegi Dobara’
Best Hindi Film: ’I Am’
Best Marathi Film: ’Shaala’
Best Kannada Film: ’Kurmavatara’
Best Bengali Film: ’Ranjana Ami Aar Ashbona’
Best Malayalam Film: ’Indian Rupee’
Best Tamil Film: ’Vaagai Sooda Vaa’
Best Dogri Film: ’Dille Ch Vasya Koi’
Best Manipuri film: ’Phijigee Mani’
Best Punjabi Film: ’Anne Gode Da Daan’
Special Mention: Director Shari for ‘Adi Madhyantam’ (Malayalam Film) and Mallika for ‘Byari’ (Kannada Film)
Best film critic: Manoj P Pujari
Best Book Award: Anirudha Bhattacharjee and Balaji Vittal for ‘R.D. Burman The Man, The Music’
Indira Gandhi award for debut film director: Thiagarajan Kumararaja for ‘Aaranya Kaandam’
Special Jury Award: Anjan Dutta for ‘Ranjana Ami Aar Ashbo Na’

Post a Comment

14 Comments

  1. Anonymous8.3.12

    நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  2. Boss,

    நானும் அந்த அறிவு ஜீவியின் "வாகை சூட வா" படத்தை விமர்சனம் செய்த விதம் பிடிக்காமல் பின்னூட்டம் செய்தேன்.அதை அவர் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.ஒரு விமர்சனத்தின் பின்னூட்டத்தை ஏற்றுக் கொள்ள தகுதி இல்லாத இவர் அடுத்தவர் திரைப்படத்தை விமர்சனம் செய்ய அருகதை அற்றவர்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Anonymous8.3.12

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. Anonymous8.3.12

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. இந்த ஒலக சினிமா ரசிகர்கள் தொல்லை தங்க முடியலடா...மசாலா படங்களை எதிர்த்தாலும் பரவாய் இல்லை.வாகை சூட வா போன்ற நல்ல படங்கள கூட விமர்சனம் என்ற பெயரில் குதறி எடுக்கின்றார்கள் ..அதுவும் ரசிபதற்க்கு சினிமா மொழி அவசியம் என்று எதோ சினிமாவை தாங்க தான் கண்டு பிடிச்ச மாதிரி சொல்லுவாங்க ஹி ஹி ஹி

    ReplyDelete
  7. alagar samyin kudiraikku kidaitha innoru virudhai patri vendrum endre kuripdavillai pol therigiradhu...iv vanndin siranndha poluthu porku nirantha padamaga therivu seyyapatta podhilum yen indha kolaveriyo....
    intha padathil rajavin isai patri anegamana padivalargal athirpthi theriviththavgarale adhigam aanal adhayium thandi ulagatharamana isai koduththadal indru alagar samyin kudirai nimirnthu nikkiradhu...illayel athuvum innoru sinimavaga mara(i)kka patrikkum..........

    ReplyDelete
  8. Anonymous8.3.12

    I accept your comments bro.. C/S oda LOLLU thangamudiyala

    ReplyDelete
  9. Anonymous8.3.12

    cable shankar thane antha olaga maha vimarsagar??? right vidu..

    ReplyDelete
  10. "அதிமேதாவி பதிவர்கள் !"

    நீங்களே சொல்லி வீட்டீர்களே சார் ! பிறகென்ன ?

    ReplyDelete
  11. Boss,

    நானும் அந்த அறிவு ஜீவியின் "வாகை சூட வா" படத்தை விமர்சனம் செய்த விதம் பிடிக்காமல் பின்னூட்டம் செய்தேன்.அதை அவர் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.ஒரு விமர்சனத்தின் பின்னூட்டத்தை ஏற்றுக் கொள்ள தகுதி இல்லாத இவர் அடுத்தவர் திரைப்படத்தை விமர்சனம் செய்ய அருகதை அற்றவர்.

    உங்கள் கருத்து அங்கே அனுமதிக்கப்பட்டுத்தானே இருக்கிறது. அதுவே உங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட விஷயம்தான். அதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. :))

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா....டைட்டானிக் எல்லாம் ஒரு படமா?

      Delete
  12. அது சரி அந்த ஒலக மகா டைரக்டர் ஒரு நாள் படம் எடுக்கத்தான் போறாரு. பார்ப்போம்

    ReplyDelete
  13. அது சரி அந்த ஒலக மகா டைரக்டர் (பதிவுலக விமர்சகர்) ஒரு நாள் படம் எடுக்கத்தான் போறாரு. பார்ப்போம்

    ReplyDelete

Drop Anything