Tamil Super Jokes

Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!
 

Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..

என்ன சார், இரயில் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?"
 

"இல்லைங்க, upper Berth குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு"
 

"Lower Birth" காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?""
 

இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா,
 

கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிற

"இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா"

"அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?"

"சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?"

"நான் உட்கார்ந்துட்டேன்னா "டேபிளை" எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?"


ஹலோ, அண்ணாமலை இருக்காரா?"
 

"ஐய்யா குளிக்கறாரு"
 

"சாரிங்க, ராங் நம்பர்"

----------------------------------------
 

பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும்.
தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்"

"பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?"

"என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?"
 

"பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு"
 

"அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?"
 

"கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க"
 

"மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?"
 

"நம்ம வீட்லதாங்க"
 

"நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா"
 

"நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு"
 

"நம்ம மாடா?"
 

"ஆமாங்க"
 

"ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?"
 

"மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க"
 

"ஐயய்யோ… எப்பிடிடா?"

"வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு"
 

"வீடு எப்படிடா எரிஞ்சது?"
 

"குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க"
 

"குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?"
 

"அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?"
 

"யார்ரா செத்தது?"
 

"உங்க அம்மா"
 

"எப்படி செத்தாங்க"
 

"தூக்கு போட்டுக்கிட்டு"
 

"ஏன்?"
 

"அவமானத்திலதான்"
 

"என்னடா அவமானம்?"

"என்னடா அவமானம்?"
 

"வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?"
 

ஓடிப் போனது யாரு?"
 

"உங்க பொண்டாட்டிதான்"

Post a Comment

0 Comments