kolaikara analaachu en moochu padal varigal

 பாடகர்கள் : கல்யாணி மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

kolaikara-analaachu-en-moochu-lyrics-


பெண் : கொலைகாரா……

அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு

அட கொலைகாரா……ஆ ஹோய்…..


ஆண் : கொலைகாரி…..

உன்ன பாத்து உசுர் போச்சு

நின்னு போச்சு என் மூச்சு

அடி கொலைகாரி…..


பெண் : உன் மடியில் சீராட்டு……

என் மனச தாலாட்டு…..

அந்த அலைமேல் பாய் போட்டு……

என் அழகே நீராட்டு…..


பெண் : கொலைகாரா……

அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு

அட கொலைகாரா……ஆ ஹோய்…..


பெண் : பாலும் சோறும் உங்காம

பச்சை தண்ணி செல்லாம

இத்து இத்து போனேனே…..

எச்சில் முத்தம் இல்லாம…..


பெண் : நெஞ்சாங்கனி தாங்காம

ரெண்டு கண்ணும் தூங்காம

கட்டில் சுகம் காங்காம

காமன் செய்யும் நாட்டாமை…..


ஆண் : பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி

புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி

பச்ச வாழ தோப்புக்குள்ள பந்தி வெக்க வாடிப்புள்ள

பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல…..

கொலைகாரி…..ஏ……


பெண் : ஆஅ……ஆ…..ஆ….

ஆஹ்….ஆஹ்……ஆஅ……..


ஆண் : நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம்

உன்ன கண்டு வலைவீசும்

சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்

ஓர கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்

உன்ன மட்டும் தொட்டாலே

மாசம் எல்லாம் பூவாசம்


பெண் : பாதி கொலை செஞ்சுப்புட்டு

தப்பி செல்லும் மூடா

முத்தம் இட்டு மொத்தத்தையும்

கொன்னுப்புட்டு போடா

ஆசை வச்ச பொம்பளைக்கு

அஞ்சு நாளா தூக்கமில்லை

மீசை வச்ச ஆம்பளைக்கு

மெத்தை வாங்க நெனப்பில்லை……


ஆண் : கொலைகாரி

உன்ன பாத்து உசுர் போச்சு

நின்னு போச்சு என் மூச்சு

அடி கொலைகாரி…..


பெண் : கொலைகாரா……

அனலாச்சு என் மூச்சு

புத்தி மாறி போயாச்சு

அட கொலைகாரா……ஆ….


ஆண் : உன் மடியில் சீராட்டு…..

என் மனச தாலாட்டு…..

அந்த அலைமேல் பாய் போட்டு..

பெண் : என் அழகே நீராட்டு……  


Kolaikaara analaachu lyrics in English

Post a Comment

0 Comments