சொர்க்கத்திற்குள் வக்கீல்களை அனுமதிப்பதில்லை!

உலகில் பொய் பித்தலாட்டாம் போன்றவற்றாலும் தன் வாதத்திறமையாலும் பல குற்றவாளிகளை காப்பாற்றி, நிரபராதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து கொண்டிருந்த ஒரு பிரபல வக்கீல் இறந்து பரலோகம் போனாராம்! 

பரலோகத்தில் சொர்க்கத்தை கண்ட வக்கீல் ஆசையோடு சொர்க்கம் பக்கம் நடந்து போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.
அவரும் "ஆமாம்" என்றார்.
தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை!

"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"
"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"

"ஆஹ்... நான் நிறையப்பேருக்கு உதவி செய்திருக்கிறேன் தர்மம் வழங்கியிருக்கிறேன். இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்தேன்! 

நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன்.

"ஓ.. சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து வந்த தேவதை."இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய்!
கூட சேர்த்து 3 ரூபாயோடு 20 ரூபாயை பிடியுங்கள்.. 

ஜஸ்ட் YOU..GO TO THE HELL...!" 

Post a Comment

5 Comments

  1. நகச்சுவையுடன் சொல்லப்பட்ட கருத்து அருமை
    நிச்சயமாக தீதுக்கு துணை நிற்போருக்கு
    சொர்க்கத்தில் இடம் கிடையாதுதான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹா...ஹா... வக்கீலுக்கு என்னவொரு தாராள மனசு...!

    நன்றி...
    tm2

    ReplyDelete
  3. வழக்கறிஞர்களுக்கே இந்த தண்டனையென்றால்..

    அரசியல்வாதிகள்?
    ஆன்மீகவாதிகள்?
    வியாபாரிகள்?
    விளம்பரதாரர்கள்?

    இவர்களுக்கெல்லாம்..

    ReplyDelete
  4. தவறான கருத்து. சில பல வக்கீல்கள் அப்படி செய்வதால் அந்த தொழிலே அப்படி தான் என்று என்ன கூடாது.
    அது ஒரு தொண்டு. நீதியை நிலை நாட்டி, தவறாக ஒருவர் தண்டனை பெற்று விட கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு நிலை பெறவும் அவர் படும் சிரமம் மிக அதிகம்.
    உங்களின் சொத்து, கௌரவம், நற்பெயர் கேள்வி குறியாக இருக்கும் போது அவர் உங்களுக்கு கடவுளாக தெரிவார்.
    போலீஸ், தனி நபர், மற்றும் எவரிடம் இருந்தும் அத்துமீறல் ஏற்படும் போது, உங்கள் சுய மரியாதையும், வாழ்க்கையையும் காப்பாற்றி தருபவர். உண்மையில் அவர் ஒரு மருத்துவருக்கு நிகராக போற்றத்தக்கவர். எல்லோரும் முன்னேறி செல்லும் இந்த நாளில், அவர்கள் தங்களை விளம்பரம் செய்து கொள்ள அனுமதி கிடையாது என்பது தெரியுமா.

    ReplyDelete
    Replies
    1. Sorry! I Know.. This is Just Joke!! Take it eazy.

      Delete

Drop Anything