பலஸ்தீனர்கள் வாழத்தகுதியற்றவர்கள்-இக்பால் செல்வன்!

இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட ஹமாஸ் ரானுவத்தளபதி அஹ்மத் அல் ஜபரி

இக்பால் செல்வன் என்ற பதிவருக்கு இஸ்லாமிய சமூகத்தின் மீது ஏன் இத்தனை வெறுப்போ கோபமோ தெரியவில்லை! தன்னை ஒரு நாத்திகராக காட்டிக்கொள்ளும் இவர்  எங்கெல்லாம் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்களோ அப்போதெல்லாம் ஆனந்தத்தில் திக்குமுக்காடி போய்விடுவார்.. அதேபோல்தான் இப்போது இஸ்ரேலின் காட்டுமிராண்டி தாக்குதலுக்கும் நியாயம் பேசுகிறார்!அதுவும் தன் சொந்தப்புத்தியினால் அல்ல மேற்குலக மீடியாக்களுக்கு ஜால்ராஅடித்து ஆங்கிலத்தில் வருவதை அப்படியே தமிழ்படுத்துவதன் மூலம்!! அவை இஸ்ரேலின் தற்காப்புக்கான தாக்குதலாம்! பெண்களையும் குழதைகளையும் கொன்றுதான் இஸ்ரேல் தன்னை தன்னை தற்காத்துக்கொள்கிறதாம்!

"மொத்த மக்கள் தொகை 500, 000 பேர். உலகில் வாழத் தகுதியே அற்ற ஒரு வட்டாரம் என்பதில் காசாவும் அடங்கும். அங்குத் தான் செயல்பட்டு வருகின்றது ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம்."-இக்பால் செல்வன்.
http://www.kodangi.com/2012/11/israel-hammers-gaza-with-airstrikes-warns-of-ground-operation.html#.UKaNpIeQo_M
எப்படி தன் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் ஒரு இனத்துக்கெதிரான வெறியையும் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.. இஸ்ரேலின் அடக்கு முறைகளுக்கெதிராக போராடுபவர்கள் தீவிரவாதிகளாம் பெண்களையும் குழந்தைகளையும் கொல்பவர்கள் வீரர்களாம் போராளிகளாம்..! இக்பால் செல்வனுக்கும் வெறிபிடித்து அலையும் இஸ்ரேலிய யூதனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது! ஒரு பக்க நியாயங்களை மட்டுமே அறிவாளித்தனமாக விஷக்கருத்துக்களோடு பேசி மக்களை நம்ப வைப்பதே இவரின் பிரதான தொழில்! அது மட்டுமல்லாம் தன் சொந்த பூமியை மீட்டெடுக்க போராடுபவர்கள் நச்சுப்பூச்சிகளாம் அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்களாம்!
இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட குழந்தை!

ஒரு போராட்டத்தை கொச்சைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் மதத்துக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என மதசாயம் வேறு பூசுகிறார்
திரு டோண்டு இராகவன் போல் இக்பால் செல்வனும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம் தான் ஒரு இஸ்ரேல் ஆதரவாளன் என! அது அவரின் தனிப்பட்ட விருப்பம் அதில் யாருக்கும் பிரச்சினையில்லை.. அதைவிட்டுவிட்டு ஒரு சமூகத்தையே வாழத்தகுதியற்ற சமூகமாக விபரித்து அநியாயத்துக்கு நியாயம் கற்பிக்காமல் இருந்திருக்கலாம்!

இதற்குள் பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என நீலிக்கண்ணீர் வேறு! வினவு தளம் கூடத்தான் எல்லாவற்றையும் போல் இஸ்லாத்தின் மீதும் விமர்சனம் வைக்கிறது அதில் கொஞ்சமாவது நியாயமும் நேர்மையும் இருக்கிறது..ஆனால் இவரின் பதிவுகள் முழுக்க முழுக்க ஒரு மதத்தையும் அதனைச்சார்ந்த மக்களையும் கொச்சைப்படுத்துவதற்கென்றே திட்டமிட்டு நாத்திகன் என்ற முகமூடி போட்டு எழுதப்படுபவை! அவர் எவ்வளவுதான் எழுதினாலும் அவரின் உள்மனது உரத்துச்சொல்லும் உண்மைகளை! அதை இந்த இந்த உலகமும் அறியும்!

இஸ்ரேலின் தாக்குதல் சம்பந்தமாக வினவுவின் பதிவு படிக்க

http://www.vinavu.com/2012/11/16/gaza-attack/

நண்பர் கலையரசன் பதிவிலிருந்து....

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.
தொடர்ந்து படிக்க..
http://kalaiy.blogspot.nl/2008/08/blog-post_24.html

Post a Comment

64 Comments

  1. உங்கள் மீது அமைதி நிலவுவதாக....

    இவரைஎல்லாமா கணக்கில கொண்டு பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க? இல்ல இவர் சொல்றத கேட்க கூட ஆள் இருக்காங்களா?? what a pity...லூஸ்ல விடுங்க சகோ....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் சகோ!உண்மை என்ன என்பதை பக்கச்சார்பின்றி சிந்திக்கும் மக்கள் அறிவார்கள்.. இவருக்கு மட்டும்தான் உலக அரசியல் தெரியும்கிறமாதிறி பீத்துவதை பொறுக்க முடியாமல்தான் இந்தப்பதிவு!

      Delete
  2. இக்பால் செல்வன் மற்றும் சார்வாகன் ஆகியோர் தங்களை நாத்திகர்களாக கருதிக் கொண்டாலும் அவர்களுக்குள் அவர்களின் மதப்பற்று கருக்கொண்டுள்ளது. அவர்கள் கமலைப் போல ஒருவன்கள். தங்களுடைய மதப்பற்றிலிருந்து அவர்கள் மீளவில்லை என்பதற்கு அவர்களின் பதிவுகளே சாட்சி.

    ReplyDelete
  3. பாலஸ்தீன போராளிகளான ஹமாஸை நச்சுப்பூச்சி என குறிப்பிடும் கோடங்கி இக்பால் செல்வன் எனப்படும் நச்சுப்பூச்சி சரித்திரத்தை முறையாக முழுமையாக படிக்கட்டும்.

    இக்பால் செல்வன் எனப்படும் நச்சுப்பூச்சி பலவாறாக பல பதிவுகளில் தன் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் சேர்த்து செய்து வரும் ஜகதாளபுரட்டு திரிப்புகள் நாளுக்கு நாள் மிகுந்து வருவதை கவனித்துக்கொண்டு தான் வருகிறோம்.

    ------------------------------------

    ஹமாஸ் - (Harakat Al Muqawamah AlIslamiyah)

    ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas).

    அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்பு இது.

    பாலஸ்தீனின் விடுதலைக்காக மட்டும், இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் செயல்படும் ஓர் அமைப்பு.

    பாலஸ்தீனுக்கு வெளியே ஹமாஸுக்குத் தீவிரவாத இயக்கம் என்று பெயர்.

    ஆனால் பாலஸ்தீனுக்குள் அது ஒரு போராளி இயக்கம் மட்டும்தான்.

    யூதர்களின் அராஜகங்கள் அனைத்துக்கும் ஒரு தடுப்புச் சக்தியாக விளங்கக்கூடியவர்கள் என்கிற அறைகூவலுடன் (ஹமாஸின் முழுப்பெயரின் நேரடியான அர்த்தமே இதுதான்) பாலஸ்தீன் விடுதலைப் போரில் ஹமாஸ்

    ஆனால் எந்த இயக்கத்திலும் படித்தவர்கள் கிடையாது. அல்லது அரைகுறைப் படிப்பு. எந்த ஒரு விஷயத்தையும் உள்ளார்ந்து யோசித்து, அலசி ஆராய்ந்து செயல்படக் கூடியவர்களாக அப்போது யாரும் இல்லை.

    ஹமாஸின் பலமே, படித்தவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் என்பதுதான்.

    லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டக்கூடிய பல மிகப்பெரிய கட்டுமான வல்லுநர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், மதகுருக்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஹமாஸை வழி நடத்தத் தொடங்கினார்கள்.

    இத்தனை பெரிய ஆட்களுக்கெல்லாம் துப்பாக்கி தூக்குவதைத் தவிர, வேறு யோசனையே வராதா என்று ஒரு கணம் தோன்றலாம்.

    இந்தியா போன்ற பிரச்னைகள் அதிகமில்லாத தேசத்தில், அதிலும் குறிப்பாக ஜனநாயக தேசத்தில் அமர்ந்துகொண்டு, பாலஸ்தீன் பிரச்னையைப் பார்க்கும்போது, சில விஷயங்கள் இப்படித்தான் அந்நியமாகத் தோன்றும்.

    ஆயுதப்போராட்டம் தவிர வேறு எதுவுமே உபயோகப்படாது என்று, அத்தனை பேருமே அங்கே முடிவு செய்து களத்தில் இறங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுவது, ஒவ்வொரு கட்டத்திலும் இங்கே அவசியமாகிறது.

    ஏனெனில் பாலஸ்தீனிய அரேபியர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் அரசோ, மற்ற தேசங்களின் அரசுகளோ, செவி சாய்க்கவே இல்லை என்பதுதான் சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை.

    என்றைக்கு பிரிட்டன், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை உருவாக்குவது என்று முடிவு செய்ததோ, அன்றைக்கு ஆரம்பித்த சிக்கல் இது.

    பாலஸ்தீனியர்களுக்கென்று பிரித்துக்கொடுக்கப்பட்ட மேற்குக்கரையையும் காஸாவையும் கூட இஸ்ரேல் அபகரித்தபோது, அதன் தீவிரம் அதிகமானது.

    அந்தத் தீவிரக் கணத்தில் உதித்த இயக்கம்தான் ஹமாஸ்.


    மேற்குக் கரையும் சரி, காஸாவும் சரி, பாலஸ்தீனிய அரேபியர்கள் வாழும் இஸ்ரேலின் எந்த மூலை முடுக்காயினும் சரி. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக ஹமாஸ் தனியொரு அரசமைப்பையே வைத்திருந்தது.

    சாலைகள் போடுதல், குடிநீர் வசதி செய்துதருதல், வீதிகளில் விளக்குகள் போட்டுத்தருதல், குப்பை லாரிகளை அனுப்பி, நகரசுத்திகரிப்புப் பணிகள் ஆற்றுதல் என்று ஹமாஸின் 'அரசாங்கம்' செய்த மக்கள் நலப்பணிகள் ஏராளம்.

    பாலஸ்தீனிய அரேபியர்கள் ஹமாஸை எந்தளவுக்குக் கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஹமாஸை அச்சமூட்டும் பயங்கரவாத இயக்கமாகத் தொடர்ந்து கண்டனம் செய்துவருகின்றன

    எப்படி பாலஸ்தினியர்களிடமிருந்து சூழ்ச்சி வஞ்சனைகளால் பாலஸ்தீன் அபகரித்து பிடுங்கப்பட்டு இஸ்ரேல் என்று இல்லாத ஒரு நாடு உருவாக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அன்றிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீனியர்களை பற்றியும் அவர்களுக்காக போராடும் ஹமாஸ் இயக்கம் பற்றியும் அறிந்துகொள்ள‌.


    திரு. பா.ராகவன் எழுதிய “நிலமெல்லாம் ரத்தம்” 100 பகுதிகள் அடங்கிய தொடரை <<<<< இங்கு கிளிக் செய்து முழுமையாக படிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! உங்கள் முயற்சிற்கு.. பா.ராகவன் எழுதிய தொடர் அருமை! பல வரலாற்றுத்தகவல்களை அறிய முடிகிறது. ஆனால் இஸ்லாமிய எதிர்ப்புக்கொண்ட சில நச்சு ஊடகங்களும் இக்பால் செல்வன் போன்றவர்களும் நியாயமாக சிந்திக்காத வரை செவிடன் காதில் ஊதிய சங்குதான்!

      Delete
    2. Anonymous16.11.12

      உங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா. நல்லா இருக்கு உங்க நியாயம் ... !

      ஹமாஸை போராளிகளாக ஏற்க வேண்டும், ஆனால் தமிழ் புலிகள் தீவிரவாதிகளே என பதிவுல இஸ்லாமிய பதிவர்களின் வாதம் நல்லதொரு வேடிக்கை. ... !

      Delete
  4. சகோ.ரிஷி

    *****இக்பால் செல்வன் said...

    என்ன சொல்ல.. இன்னும் இப்பதிவு முதன்மையாக திகழ்கின்றது. தீப்பயனாய் என்னுடைய கொடுக்கி தளம் சில கயவர்களால் சூறையாடப்பட்டு விட்டது ... பரவாயில்லை இன்னொரு பதிவில் கோடங்கியில் முகமது முகம் மலர்வார். அதுவரை காத்திருங்கள் !
    June 7, 2012 6:06 AM ******************

    கொடுக்கின்னு ஒரு தளம் இருந்துதா..???

    கொடுக்கி தளத்துக்கு கொடுக்கு வெட்டப்பட்ட கதையை யாரவது எனக்கு சொல்லுங்களேன்..நான் பதிவுலகுக்கு புதுசு..

    வெட்டப்பட்டது கொடுக்கு மட்டும் தானா..???

    நன்றி !!!

    ReplyDelete
  5. If he is justifying the Gaza bomb raid as a protective/preemptive measure of Israel. How about Sri Lankan bomb raid and massacre over Tamils as protective measure from LTTE and like groups attack (I hate to mention this here and I do not support this). From a Tamilian view it is massacre from a Sinhalese view it is a protective measure.

    ReplyDelete
    Replies
    1. Yes you are Correct!

      Delete
    2. Anonymous16.11.12

      இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தியைமை தற்காப்பு தான் யார் இல்லை என்றது, தமிழ்புலிகள் போன்ற தீவிரவாதங்கள் அழிக்கப்பட வேண்டியவை .. ஆனால் இஸ்ரேலையும், இலங்கையும் ஒப்பிட வேண்டாம் ..

      இரண்டுக்கும் பல வேறுபாடுகள் உண்டு ... ! நான் காசா மக்களை இஸ்ரேல் கொல்ல வேண்டும் என சொன்னேனா .. ஹமாஸ் அழிய வேண்டும் என்று சொன்னேன் ..

      சரி விடுங்கள், இன்று ஹமாஸ்-க்கு வக்கலாத்து வாங்கும் நீங்கள், போராளிகள், இன உரிமை என்கின்றீர்கள். தமிழ் புலிகள் விடயத்தில் கமுக்கமாக இருந்தது ஏன் .. பத்து பேர் இறந்ததும் துடிக்கும் நீங்கள், ஒரு லட்சம் தமிழர்கள் இறக்கும் போது பொத்திக் கொண்டு இருந்தது ஏன் ..

      படிப்பவர்கள் புரிந்துக் கொள்வார்கள் ..

      @ ரிஸி - எனது பதிவுக்கு சுட்டியைக் கொடுத்துவிட்டு விமர்சியுங்கள், இல்லை என்றால் விமர்சிக்க வேண்டாம் .. சற்றே நியாயமாக நடப்பீர்கள் என கருதுகின்றேன்

      Delete
    3. நீங்கள் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொன்னால்தான் உங்கள் சுட்டியை கொடுக்காமல் மறைக்க வேண்டும்! உண்மையைச்சொல்ல எதற்கு தயக்கம் உங்கள் ஆசைப்படியே சுட்டியை கொடுத்துள்ளேன்..!

      //நான் காசா மக்களை இஸ்ரேல் கொல்ல வேண்டும் என சொன்னேனா .. ஹமாஸ் அழிய வேண்டும் என்று சொன்னேன்// ரெண்டும் ஒன்றுதான் சார்.. காசா மக்களிலிருந்து அடக்குமுறைகளுக்கெதிராக போராட வந்தவர்கள்தான் ஹமாஸ்.. அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வரவில்லை!!

      //பத்து பேர் இறந்ததும் துடிக்கும் நீங்கள், ஒரு லட்சம் தமிழர்கள் இறக்கும் போது பொத்திக் கொண்டு இருந்தது ஏன்//

      இலங்கைத்தமிழர்கள் செத்ததை இங்கு யாரும் நியாயப்படுத்தவில்லை!

      இறந்தவர்கள் இப்போதுதான் பத்து இதற்கு முன்னைய கணக்கு பல ஆயிரம் வரலாறு முக்கியம் சகோ!!

      Delete
    4. Anonymous16.11.12

      நீங்கள் செய்யாமல் இருக்கலாம் ஆனா உங்கள் கூட்டத்தில் இருக்கும் மத வெறி பிடித்த சுவன பிரியன், வாஞ்சூர் செய்திருக்கிறார்கள்.

      Delete
  6. சகோ நாகூர் மீரான்.அப்படியொரு தளம் முன்னொரு காலத்தில் இருந்திருக்கலாம்! நமக்கு தெரியாதுப்பா :-) நானும் புதுசுதான்,,

    ReplyDelete
    Replies
    1. Anonymous16.11.12

      கடந்த ஆண்டுகளில் பதிவுலகில் இருந்தோருக்கு தெரியும் .. மத்தியக் கிழக்கில் சில நாடுகளில் தடை செய்யப்பட வைத்தது .. ஹாக் செய்யப்பட்டது எல்லாம் உங்கள் பதிவுலக சகாக்களுக்கு நன்கு தெரியும். பின்னர் போலி வோட்டு போட்டு அந்த பழியை ஈழத் தமிழர்கள் மீது போட்டு கையும் களவுமாக எடக்கு மடக்காக மாட்டிக்கொண்டு விழித்தவர்கள் ..

      இந்த வாக்கரசியல், வாய்க்கு அரிசியில் நமக்கு நம்பிக்கை இல்லை .. ! அதனால் நான் ஒதுங்கி கொண்டேன் .. புதியவர்கள் அறியாமல் இருப்பதில் வியப்பில்லை

      Delete
    2. 'கோயபல்ஸ்' இக்பால் செல்வன்....
      கவனத்திற்காக அல்ல இது....
      மற்றவர்களுக்காக..............

      "கள்ள வோட் பின்னணியில் ஈழ பதிவர்கள்?"
      http://manithaabimaani.blogspot.com/2012/05/blog-post.html
      இது ஏறக்குறைய ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை..!

      பகிரங்க சவால்...!

      இப்பதிவுக்கு மறுப்பு சொல்வதாக இருந்தால்... மெய்யாலுமே மூளையும் முதுகெலும்பும் உள்ள எவரும் ஓடி ஒளியாமல்... இதற்கு, அங்கேயே மறுப்பு சொல்லலாம்..!


      அடுத்து................///இந்த வாக்கரசியல், வாய்க்கு அரிசியில் நமக்கு நம்பிக்கை இல்லை .. ! அதனால் நான் ஒதுங்கி கொண்டேன் .. புதியவர்கள் அறியாமல் இருப்பதில் வியப்பில்லை///---------------------------அப்படியா சங்கதி...?


      rizwan26
      marxan
      niranjan1
      niranjanpatel
      navajyothi
      maryamnoorani
      madhan80
      shahinshah
      iqbalselvan
      pondicherryblog
      pondicherryblog@gmail.com
      ankithavarma
      kodangi
      --------------------நல்லா வருவீங்கப்பூ.........! :-))

      Delete
    3. மேலே நான் "நல்லா வருவீங்கப்பூ" என்று வாழ்த்திய லிஸ்டில் உள்ளவர்கள் யார் என்றால்...

      கடந்த பல வாரங்களாக எப்போதுமே இக்பால் செல்வனின் (கோடங்கி & கவிவாணம்) எந்த பதிவை எடுத்துக்கொண்டாலும்... அதில் முதலில் விழும் ஏழு பிளஸ் ஓட்டுக்களில் தவறாமல் இடம்பெறும் பெயர்கள்தான் அவை..! :-)

      சரி... அது ஓர் ஓரமாக இருக்கட்டும்...!

      இப்போது....

      மெளன தேசத்தின் இந்த பதிவின் ஓட்டுக்கள் பற்றி பார்ப்போம்..! இதில்... 13/24 எனில், அதாவது.... 13 பிளஸ் ஓட்டுக்கள்... 11 மைனஸ் ஓட்டுக்கள் விழுந்துள்ளன...!

      அதன் மொத்த லிஸ்ட் 24 பெயர்கள் அடங்க்கிய பட்டியல் இதோ....
      http://tamilmanam.net/who_voted.php?id=1202252


      aashiq_14
      benedictjly@gmail.com
      uthayam
      nijam
      nagoormeeran123
      urbrohasan@gmail.com
      raazi
      sindhikka
      peermohamed.m@gmail.com
      mdsultan
      adiqbal.ab@gmail.com
      ayusha22
      suvanappiriyan


      rizwan26
      marxan
      niranjan1
      niranjanpatel
      navajyothi
      madhan80
      shahinshah
      pondicherryblog@gmail.com


      alexm
      davids
      robin


      ----------இப்போ நான் உங்கள் எல்லாருக்கும் ஒரு போட்டி வைக்க போறேன்...!

      மேலே உள்ள லிஸ்டில்....
      இந்த பதிவுக்கு பாசிடிவ் ஓட்டு போட்டது யார் யாரு...?
      நெகட்டிவ் ஓட்டு போட்டது யார் யாரு...?

      கமான்... க்விக்... சொல்லுங்க பார்ப்போம்..!

      Delete
    4. தமிழ்மணம் 12வது மைனஸ் ஓட்டு நானே....நானே...நானே... :)

      Delete
    5. அப்புறம் ஒரு சின்ன குளூ ஒண்ணு தாரேன்...

      alexm
      davids
      robin
      ---------------இந்த மூன்று பெயர்களும்...
      இக்பால் செல்வனின் நெருங்கிய கூட்டாளிமார்கள் (சார்வாகன் போன்றவர்கள்) பதிவில் பிளஸ் ஓட்டு லிஸ்டில் இருப்பவர்கள். அது மட்டுமல்லாது, இக்பால் செல்வனின் பதிவுகள் 20 ஓட்டுக்களை அடைந்தால்... அந்தபாஸிட்டிவ் ஓட்டு லிஸ்டிலும் கட்டாயம் இருப்பவர்கள்..! :-))

      Delete
    6. Anonymous20.11.12

      உங்க விளையாட்டை ஆரம்பித்துவிட்டீர்கள், என் பதிவுகளில் இந்த வாக்குகள் விழும் போதே எனக்குத் தெரியும், அடுத்த பலியாடு நான் என்பதை. நீவிரே வினை, நீவிரே வினா? பொறுத்திருந்தேன் ஒரு நாள் அகப்படாமல் போவார்களா என?

      Delete
    7. இந்த சால்ஜாப்பாய் ஏற்கனவே ஈ டமிளன்ஸ் பயன்படுத்திட்டாங்க. அவங்க கிட்டே தான் இதுக்கு 'காப்பி ரைட்'(?) இருக்கு.

      அதனாலே... மிஸ்டர்.இக்பால் செல்வன்,
      நீங்க ஏதாவது சொந்தமா சிந்திச்சு புதுஸா கதை விட முயற்சி செய்யலாமே...? :-)

      Delete
  7. Anonymous16.11.12

    சகோ. எனது பதிவை நீங்கள் விளங்கி கொள்ளவில்லை. பாலஸ்தீனர் என்ற சொல்லை நான் எனது பதிவில் எங்குமே சொல்லவில்லை .. காசாவை மட்டுமே சொன்னேன் ... ! பாலஸ்தீன மக்கள் அரசாங்கத்தை நான் குறை கூறவே மாட்டேன் .. ஆனால் தீவிரவாத ஹமாஸை ஆதரிக்கப் போவதும் இல்லை .. !

    முஸ்லிம்கள் என்ற ஒரேக் காரணத்துக்காக நீங்கள் வேண்டுமானால் தீவிரவாதிகளை தலையில் வைத்துக் கொண்டாடலாம், உங்களுக்கு நியாயமாக படலாம். நடுநிலையில் இருந்து பார்த்தால் தீவிரவாதிகள் அழிப்பட வேண்டியவர்களே, ஹமாஸ் காசாவை விட்டு வெளியேறி காசாவை பாலஸ்தீன அரசிடம் ஒப்படைப்பதே அனைவருக்கும் நல்லது.

    இதில் இனப் போராட்டத்தையோ, பாலஸ்தீனர் உரிமைகளையோ நான் எங்காவது கொச்சைப்படுத்தி உள்ளேனா... எனது பதிவை எடுத்தாளும் போது , எனது பதிவுக்கான சுட்டியை இடாமல் மறைத்தது ஏனோ ? வாசகரை திசைத்திருப்பவா ??!!!

    ReplyDelete
    Replies
    1. தீவிரவாதிகள் அழியப்படவேண்டியர்கள் என்பதில் எங்களுக்கும் மாற்றுகருத்தில்லை!! ஹமாசை நீங்கள் சொல்வதுபோல் தீவிரவாதிகளாகவே வைத்துக்கொண்டாலும் அவர்கள் மதத்துக்காகவோ அவர்களின் தனி நலங்களுக்காகவோ போரடவில்லை!! அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவே போராடுகிறார்கள்!

      Delete
    2. Anonymous16.11.12

      //அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவே போராடுகிறார்கள்!//

      இதனையே தான் தமிழ் புலிகளும் சொன்னார்கள்.. ஆனால் அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்காதது ஏனோ ?

      Delete
    3. Anonymous16.11.12

      ஆதரிக்கா விட்டாலும் பரவாயில்லை எதிராக காட்டி கொடுக்கும் வேலைகள் செய்தார்கள்.
      தமிழர்களை ஊர்காவல் படை என்ற பெயரில் அழித்தார்கள்

      Delete
    4. முள்ளிவாய்க்காலில் கதையை முடித்து வைத்தது முஸ்லீம்களா:))

      Delete
    5. //இதனையே தான் தமிழ் புலிகளும் சொன்னார்கள்.. ஆனால் அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்காதது ஏனோ ?//

      இதற்கு சிம்பிளாக பதில் சொல்லலாம்..

      விடுதலைப்புலிகள் இலங்கை முஸ்லிம்களின் மனதை வெலவதற்கு பதிலாய் வெறுப்பையும் கோபத்தையுமே விதைத்துக்கொண்டிருந்தார்கள் இதற்கு பல நிகழ்வுகளை உதாரணமாக சொல்லலாம்!! இப்படியிருக்க ஆரம்பத்தில் புலிகளுக்க்கு வழங்கிய ஆதரவு பின்னாளில் எதிர்ப்பாய் மாறியதில் ஆச்சர்யமில்லை!!

      Delete
  8. சகோ இக்பால் செல்வன்.. உங்களின் கேள்விகளுக்கு இந்தப்பதிவைவிட நண்பர் கலையரசனின் பதிவில் தெளிவான பதில் இருக்கு கொஞ்சம் வாசித்து பாருங்க.. இதோ

    காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

    இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

    உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.

    http://kalaiy.blogspot.nl/2008/08/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. Anonymous16.11.12

      //எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை//

      இஸ்ரேல் தனிநாடு, பாலஸ்தீனம் தனி நாடு சகோ. ஒரு நாட்டுன் ஊடாக பொருட்களை கொண்டு செல்ல வேண்டுமா, வேண்டாம எனத் தீர்மானிப்பது நாட்டை ஆளபவர்கள் .. காசாவின் ஒரு பக்கம் எகிப்து உள்ளது .. ஒரு பக்கம் பெருங்கடல் உள்ளது .. அதனூடாக பொருள்களை தாரளமாக கொண்டு செல்லலாம்.

      ஆரம்பத்தில் இஸ்ரேல் பொருட்களை அனுமதித்ததே இருந்தன, ஆனால் பொருட்கள் என்ற போர்வையில் வெடிகுண்டுகளை இஸ்ரேல் எல்லைக்குள் கொண்டு போய் வெடிக்க வைத்தார்கள் ... ! இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த மேலும் வாசிப்பு உங்களுக்கு தேவை .. கலையரசன் போன்றோரின் அமெரிக்க எதிர்ப்பு என்ற இடதுசாரித்துவத்தை தாண்டி தாரளமய லிபரல் சார்ந்த எழுத்துக்களையும் வாசியுங்கள்.

      //தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே,//

      ஐயோ ஐயோ. அது தேர்தலா, தாமே போட்டியிட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி ஃபதா வேட்பாளர்களை துறத்தி கள்ள வாக்குகள் குத்தி ஒரு பாசாங்கு தேர்தல் அது. தூபமிட்டவர்கள் துருக்கியர்கள் .. !

      முதலில் ஹமாஸ் ஆயுதங்களை களைந்துவிட்டது, பாலஸ்தீன ராணுவத்திடம் காசாவை ஒப்படைத்தாலே பாதி பிரச்சனை தீரும். மக்களின் பொருளாதார சிக்கல் முடியும் .. ! ஃபதா மற்றும் பாலஸ்தீன நிர்வாகம் தனியுரிமை பெறவும், பூரண விடுதலை அடையவும் எமது ஆதரவு உண்டு. ஆனால் ஹமாஸ் போன்ற தீவிரவாதிகளை ஆதரிப்பதன் ஊடாக மேன்மேலும் சிக்கல்களை பெரிதாக்குகின்றார்கள். ஆனால் ஹமாஸின் அப்தல் ஜபாரியின் மரணத்தோடு ஹமாஸ் அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது. வெகு விரைவில் காசா விடுதலை பெற்று சுதந்திர பாலஸ்தீனத்தின் அங்கமாக மாறும் ... !

      //பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர்.//

      பாலாஸ்தீனியத்தின் பெரும்பான்மை மக்கள் ஹமாஸை ஏற்கவில்லை, ஹமாஸ் காசாவில் மட்டுமே அதுவும் ஆயுத முனையில் மக்களை கேடயமாக்கி ஒரு முள்ளிவாய்க்கால் போல காசாவில் செயல்பட்டு வருகின்றது.

      முதலில் ஹமாஸ் 5 லட்சம் காசா வாசிகளை பாதுக்காப்பான இடத்துக்கு வெளியேற அனுமதிக்க வேண்டும் ... ! அதனை செய்யச் சொல்லுங்கள் .. ! இல்லை எனில் ஹமாஸின் கேடயமாக மக்கள் தான் பலியாவார்கள் ..

      அல்லாஹ்விடம் வேண்டுங்கள் ஹமாஸ் ஒழிய வேண்டும், காசா வாசிகள் விடுதலைக் காற்று பெற வேண்டும் என ..

      Delete
  9. அடி ஆத்தி 10 மைணஸ் வோட்!! ஏய் நானும் பிரபள பதிவராயிட்டேன்.. தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைவருக்கும் நண்றிகள்..

    ReplyDelete
  10. Anonymous16.11.12

    சேம் சைட் கோல் போட்டு உசுப்பேற்றியும் விடுவார்கள், சூதானமாக இருக்கவும் சகோ ..

    ReplyDelete
  11. Anonymous16.11.12

    தாங்கள் வழங்கிய கருத்து சுதந்திரத்துக்கு நன்றி. நான் அதை துஸ்பிரயோக படுத்த வில்லை.

    ReplyDelete
  12. எனக்கு வாக்குருமை இருந்தும் மைனஸ் வாக்கு போட எண்ணம் இருந்தும் போடவில்லை. ஏனென்றால் முன்பு அனானி பதிவர் குறிப்பிட்ட கருத்து சுதந்திரம் உள்ளமைதான்.

    ReplyDelete
  13. தமிழர்கள் அழியும் போது பல இஸ்லாமிய பதிவர் வெற்றி களிப்பு கொண்டனர். நீங்கள், ரஹாசி, அதிரடி காஜா விதிவிலக்கு.
    இதில் மர்மயோகி என்ற இஸ்லாமிய பதிவர் உச்ச கட்டம். இன்றுவரை அவர் தமிழர்கள் மீது விஷத்தை மட்டுமே கக்கி வருகின்றார்.

    ReplyDelete
  14. உண்மைகள் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக வாந்திகளை எடுத்து வரும் வாஞ்சூர் என்ன குறைந்தவரா

    ReplyDelete
  15. ****மொத்த மக்கள் தொகை 500, 000 பேர். உலகில் வாழத் தகுதியே அற்ற ஒரு வட்டாரம் என்பதில் காசாவும் அடங்கும். ****

    இஸ்ரேலில் வாழும் பாதிக்கப்பட்ட யூதர்களே இதுபோல் அபத்தமாக வார்த்தையை விடமாட்டாங்க. பழிக்குப் பழி வாங்குவதில் அவர்கள் சளைத்தவர்களும் இல்லை. ஆனால் யூதர்கள் அபிமானி இக்பால் எல்லாருக்கும் நீதி வழங்கி "நாள் வச்சிருவாரு" போல!

    ReplyDelete
    Replies
    1. Anonymous16.11.12

      ஐயா வருண் மணி வந்திருக்காக ! காஸாவை தனி நாடக அறிவிக்கச் சொல்ல போறாவுக .

      Delete
  16. PART 1. முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்

    யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே.

    இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது.

    உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை.

    திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

    புலிகள் நடத்திய வெறியாட்டம் தான் மூதூர்ச் சம்பவம்.

    வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல,

    தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில்,

    அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில்,

    அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான்,

    இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது.

    மக்கள் தமது வாழ்வை இழந்து, எல்லை கடந்து நாடோடிகளாகவே ஒடிக்கொண்டிருக்கின்றனர்.

    யாரும் இவர்கள் எமது மக்கள் என்று கூறிக் கொண்டு, அவர்களைப் பாதுகாக்கக் கூட முனையவில்லை.

    அண்மைக் காலத்தில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களை அகதியாக இந்தியாவுக்கு புலிகள் விரட்டிக் கொண்டிருந்தனர்.

    அது நிறுத்தப்பட்ட நிலையில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதூர் தாக்குதல் மூலம் மறுபடியும் அந்த மக்களை எல்லை கடந்து ஓட விரட்டுகின்றனர்.

    தமிழ், முஸ்லீம் மக்கள் தமது வாழ்வை புலிகளின் கொடூரமான புலிப் பசிக்கு இரையாக்கி வாழ்விழந்து நாடோடியாகின்றனர்.

    இந்த புலிப் பின்னணியில் பேரினவாதமே வெற்றிகரமாக இலாபம் அடைகின்றது என்றால், புலிகளைக் குப்புற வீழ்த்தி வழிநடத்துபவர்கள் யார்?

    எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படும் புலிகளின் கடந்தகால நடடிவக்கைகளின் பின்னணியில், அன்னிய சக்திகளால் வழிகாட்டப்பட்ட வரலாறுகளை புலிகளே ஒத்துக்கொண்ட உண்மையின் அடிப்படையில், இதை இன்று நாம் ஏன் பார்க்கமுடியாது?

    தண்ணீரை மூடுவதும், திறந்து விடுவதுமாக நடத்திய நாடகத்தின் பின்னணியில் தான் மூதூர் தாக்குதலை புலிகள் முன்கூட்டியே திட்டமிட்டனர்.

    முஸ்லீம் மக்கள் மீதான புலிகள் திட்டமிட்டு நடத்திய வெறியாட்டத்தில் அண்ணளவாக 1000 பேரளவில் கொல்லப்பட்டனர்.

    இதில் கணிசமான அளவுக்கு தமிழரும் அடங்குவர். மிக குறுகிய காலத்தில், மிக மோசமான ஒரு இனவெறியாட்டத்தை நாம் சமகாலத்தில் காணமுடியாது.

    1983 இனக்கலவரத்துக்கு பிந்திய, அதேயொத்த ஒரு மக்கள் அழிவையும், பழிவாங்கலையும் ஏற்படுத்திய ஒரு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும் இது.

    மிகக் குறுகிய காலத்தில், மிகவும் திட்டமிட்ட வகையில், பாரிய படுகொலைகள் முதல் அந்த சமூகத்தின் இருப்பையே அழிக்கும் வண்ணம், அவர்களின் வாழ்விடங்களையே சிதைத்து அனைத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர்.

    அங்கு வாழ்ந்த மக்கள், மீண்டும் அங்கு சென்று வாழமுடியாத அளவுக்கு தொடர்ச்சியாகவே, கடுமையான ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

    புலிவெறியாட்டத்துக்கு புலம்பெயர்ந்த அகதிகள் மீண்டும் சொந்த பிரதேசத்துக்கு சென்று வாழமுடியாத அளவுக்கு, இனவழிப்பு எச்சரிக்கையை தொடர்ச்சியாக புலிகள் ஆணையில் வைத்துள்ளனர்.

    குறிப்பாக இராணுவம் மற்றும் புலிகளின் வக்கிரமான வெறியாட்டத்துக்கு உள்ளாகிய வண்ணம் இப்பிரதேசம் உள்ளது. இப்பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாறி நிற்கின்றது.

    பேய்களும், நாய்களும் தமது சொந்த வக்கிரத்தையே பூர்த்தி செய்கின்றன.

    நீண்டகால நோக்கில் இதில் இலாபம் அடைவது நிச்சயமாக பேரினவாதம் தான்.

    தமிழ்மொழி பேசும் மக்களின் இடப்பெயர்வுக்கு, தமிழ்; முஸ்லீம் என்ற பாகுபாட்டை பேரினவாதம் வேறுபடுத்துவது கிடையாது.

    1995 இல் புலிகளின் நிர்பந்நத்தால் நடந்த யாழ் இடப்பெயர்வு கூட, மக்களை இந்தளவுக்கு சிதைத்து சின்னாபின்னமாகியது கிடையாது.

    அந்த இடப்பெயர்வு குறுகிய கால அவகாசத்துடன் திட்டமிடப்பட்டதாக மாறியது.

    யாழ் மீதான இராணுவப் படையெடுப்பின் போது கூட, இந்தளவுக்கு உயிர் அழிவும் மனித அவலமும் ஏற்பட்டது கிடையாது.

    நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது.

    அந்தளவுக்கு முஸ்லீம் மக்கள் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான மன்னிக்க முடியாத இந்த தாக்குதல்,

    அவர்களின் கடந்தகால நிகழ்கால முஸ்லீம் விரோத நடவடிக்கையின் மற்றொரு அங்கமாகத் தான் இதனை நிறைவேற்றினர்.

    இந்தத் தாக்குதல் திட்டம் முன்கூட்டியது.


    மே மாதம் இறுதியில் புலிகளின் மக்கள் அமைப்புகளின் பெயரில், எது நடக்கவுள்ளதோ அதை முன் கூட்டியே கூறி விடுத்த அச்சுறுத்தும் துண்டுபிரசுரம் சரி, 04.06.2006 வீரகேசரி பத்திரிகையில் வெளியான துரைரட்ணசிங்கம் எம்.பி மூதூர் பற்றி வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் திடட்மிட்ட நடவடிக்கையின் ஒரு அம்சமாகும்.

    இவை திடட்மிட்ட ஒரு இனவாத அழித்தொழிப்பு வெறியாட்ட நடவடிக்கைக்கு முன்னோடியான ஒரு சில சமிக்கையாகும்.



    CONTINUED ….

    ReplyDelete
  17. PART 2 . முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்

    Saturday, 12 August 2006 20:31

    புலிகள் இதை முஸ்லீம் மக்கள் மீதான வெறியாட்டமாக நடத்தி முடிக்க, இராணுவம் அதை மேலும் சுத்தமாக்கி வருகின்றது.

    அத்துடன் இராணுவம் மேலும் ஒருபடி சென்று, போகிற போக்கில் இதற்குள் அனைத்தும் அமிழ்ந்து போகும் வண்ணம், இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்;

    மூதூரைக் கடந்த பிரதேசத்தில் இருந்தும் தமிழ் மக்கள விரட்டியடிக்கின்ற வகையில் ஒரு துடைத்தொழிப்பை இராணுவம் நடத்துகின்றது.

    முஸ்லீம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவராத ஒரு நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்ற அவலமும் தெரியாது புதைந்து போகின்றது.

    அந்தளவுக்கு தமிழ் ஊடகவியல் படுசேற்றில் புதைந்து மூச்சிழுக்கின்றது.

    திருகோணமலையில் தமிழ்மொழி பேசுகின்ற முஸ்லீங்கள் தமிழர்கள், பூசாரிகளின் பேயாட்டத்துக்கு ஏற்ப குடியெழுப்பப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர்.


    காயடிக்கப்பட்ட தேசியம் தனது மலட்டுத்தனத்தால் எதையும் உயிர்பிக்கும் ஆற்றலற்று வக்கிரமாகி பேயாட்டமாடுகின்றது.

    முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் ஒரு அங்கமாக காட்டியபடி நடத்தும் இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகள், முடிவின்றி நடக்கின்றது.

    தமிழ் மக்களின் போராட்டத்தில் முஸ்லீம்கள் இலாபம் பெற முனைவதாக வக்கரித்து உறுமும் குறுந் தேசிய வக்கிரங்களை, சதா காதுகொடுத்து கேட்கின்றோம்.

    அந்த மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான வெறியாட்டம், யாழ் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தை விடவும் மிகமோசமான வகையில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

    இதன் பின்பும் கூட, தமிழ் மக்களின் ஒரு அங்கம் தான் முஸ்லீம்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.


    இராணுவம் மீதான தாக்குதல் என்ற பெயரில் புலிகள் நயவஞ்சகமாக தொடர்ச்சியாக நாடகமாடுகின்றனர்.

    நாடகமாக நடத்தியது முஸ்லீம் மீதான அழித்தொழிப்புத் தான்.
    கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் பற்றியோ, அவர்களின் அவலநிலையையிட்டு எந்தவிதமான அக்கறையுமற்ற வக்கிரமே தமிழ் ஊடகவியலில் அரங்கேறுகின்றன.

    உண்மையில் மூதூரில் புலிகள் நடத்தியது, முஸ்லீம் வாழ்விடங்களை தாம் மட்டும் நாசமாக்கி அழிக்கும் வண்ணம் புலிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை.

    மாறாக இராணுவத்தின் தாக்குதலிலும் முஸ்லீம் வாழ்விடங்கள் அழியும் வண்ணம் தாக்குதலை நகர்த்தினர்.

    அதாவது இராணுவத்தைக் கொண்டு அழிக்கும் வண்ணம், தாக்குதல் வியூகம்

    முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்தது.

    இராணுவத் தாக்குதலை முஸ்லிம் குடியிருப்புகள் ஊடாக நகர்த்தி முழுமையாக மூதூரை நாசமாக்கி மக்களை கொன்று போட்டனர்.

    இப்படி ஒரு இனஅழிப்பு யுத்தம், எமது இனவாத அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நடத்துள்ளது.


    யார் தாக்குகின்றனர் என தெரியாத வகையில், குண்டு பொழிவுகளுக்கு இடையில் மூதூர் அழிக்கப்பட்டது.

    யார் கொல்லுகின்றனர் என்று தெரியாத வண்ணம் கொலைகார நடத்தைகள் தூண்டப்பட்டது.

    மக்களை பாதுகாப்பது, மக்களை விலத்தி தாக்குதலை நடத்துவது என்பதற்கு மாறாக, அதையே தேடிச் செய்வதே அரங்கேறியது.



    இந்த நிலையில் பிரஞ்சு தன்னார்வ நிறுவன தொண்டர்களின் இனம் கடந்த மனிதாபிமான செயற்பாடுகள், புலிகளுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.

    புலிகளின் வழமையான பாணியில் பதிலடி எதிர்பார்க்கக் கூடியதுதான். அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்ற பின்னனி மர்மமாக இருந்த போதும், இந்த செய்தி முதலில் வெளிவந்த காலம், முதல் முதலில்; இதை அறிவித்த ஊடகங்களின் பின்னணியால் ஊகங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாகின்றது.

    இதை புலிகள் ஏன் செய்யமாட்டார்கள் என்று தர்க்க ரீதியாக கூற முடியாத அளவுக்கு, இது போன்ற கொலைகளை புலிகள் செய்வதில்லை என்று கூறுவதற்கு, எந்தத் தார்மிகப் பலத்தையும் கடந்த வரலாற்றில் நாம் காணமுடியாது.

    அந்தளவுக்கு புலிகளிடம் அரசியல் நேர்மையும் கிடையாது.


    புலிப் பாசிச குதர்க்கத்தையும், கொச்சைத்தனத்தையும் தாண்டி, இராணுவமும் இது போன்ற கொலை வெறியாட்டங்களை நாசுக்காகவே நடத்திவிடுவது சதா நிகழத்தான் செய்கின்றது.

    எல்லாம் புலியாக முன்பு, கொலையே அரசியலாக முன்பு, ஒவ்வொரு கொலையும் யாரால் எதற்கு ஏன் செய்யப்பட்டது என்ற சந்தேகம் யாருக்கும் எழுந்ததில்லை.

    ஆனால் இன்று அப்படி உறுதியாக கூறமுடியாத அளவுக்கு, கொலைக் கலாச்சாரமே தமிழ்தேசிய அரசியலாகிவிட்டது.

    இன்று கொலைகளைச் செய்து உலகை தம்பக்கம் வென்றுவிட முடியும் என்ற நப்பாசையில் பல்லிளித்து ஆட்டம் போடுகின்றனர்.


    CONTINUED ..

    ReplyDelete
  18. PART 3. முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய ஒழிய யுத்தமல்ல. --- பி.இரயாகரன்

    Saturday, 12 August 2006 20:31

    ஈனத்தனமாக விகாரமான கொலைகளைச் செய்து, அதை படம்பிடித்து உலகுக்கு காட்டுவதன் மூலம், உலகத்தினை தம்பக்கம் வளைத்து தமக்கு சார்பாக மாற்றமுடியும் என்ற தமிழ் தேசிய அரசியல் இன்று அரங்கேறிவருகின்றது.

    இந்த நிலையில் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதன் மூலம், இது போன்றவற்றை தாம் செய்வதாக மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர்.

    இந்த நிலையில் உண்மை என்பதே கத்தி முனையின் கீழ் அந்தரத்தில் தொங்கிவிடுகின்றது.

    இந்தநிலையில் முஸ்லீம் மக்கள் அகதியாகி மூதூரில் பொதுவிடங்களில் தஞ்சம் கோரிய நிலையில், அனைத்து உதவியும் மறுக்கப்பட்டது.

    குறைந்தபட்சம் தாமாக செயற்பட்டு இயங்க முனைந்த அடிப்படைகள் அனைத்தும் தடுக்கப்பட்டது. முன்னின்றவர்கள் கொல்லபட்டனர் அல்லது துரோகியாக காட்டி கடத்தப்பட்டனர்.

    மக்கள் தாமாக முனைந்து தண்ணீர் குடிக்க முனைந்த போது கூட, புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டது.

    இப்படி திட்டமிட்ட முறையில் உருவேற்றப்பட்ட முஸ்லீம் விரோத வெறியுடன் புகுந்த புலி இராணுவம், அந்த மக்களைக் குதறியது.
    ….
    முஸ்லிம் மக்கள் விரோத உணர்வுடன் வெறியேற்றப்பட்டு நடத்திய வெறியாட்டம் ஒருபுறம் அரங்கேற, அதை தலையில் வைத்து நக்கிப் பிழைக்க ஆடுபவனின் முஸ்லீம் விரோத வக்கிரமோ கேவலமாக உலகெங்கும் அரங்கேறுகின்றது.

    இதுவே பல உண்மைகளை பளிச்சென்று நிரூபித்துவிடுகின்றது.

    முஸ்லீம் துரோகி பற்றியும், எட்டப்பர் பற்றியும் மூக்கால் அழுது புலம்பும் ஓட்டுண்ணிப் பினாமிகள், எடுப்பார் கைப்பிள்ளையாகி முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் தம்மையறியாமலேயே நிர்வாணமாகி தலைவிரிகோலமாகி விடுகின்றது.

    மூதூர் தாக்குதலை நியாயப்படுத்த, அதை முஸ்லீம் எட்டப்பர் மீதான தாக்குதலாக வாய் கூசாது உரைக்கின்றனர்.

    சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும்.

    அதே நீங்கள் தானே, தமிழ் மக்கள் மத்தியில் எட்டப்பர் ஒழிப்பை 1986 முதலாக முடிவின்றி நாள் தோறும் நடத்துகின்றீர்களே.

    அப்படிச் செய்யும் நீங்கள் தமிழனை துரோகிகள் ஏன் கூறுவதில்லை.

    ஏன் அதை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் கூறுகின்றீர்கள்.

    அடிவருடிகளாகி நக்கித் தின்னும் புலிப்பினாமிக் கூட்டம் இப்படி குரைத்தபடி, மனித அவலத்தின் மேல் சிலிர்த்து உறுமுகின்றனர்.

    அதேநேரம் புலித்தலைவர்கள் தம்மை நல்லபிள்ளையாக காட்டிக் கொள்ள அறிக்கைகளை விடுகின்ற இன்றைய நிலையில்,

    முஸ்லீம் மக்கள் மீதான பலிப்பும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்ற வக்கிரத்தை, புலிகளின் பினாமிக் கும்பல் வசைபாடல் ஊடாக முன்வைக்கின்றது.

    இதை எழுத்திலும் ஆபாசமாக கொட்டித் தீர்க்கின்றனர்.

    ஆனால் புலித் தலைவர்கள் நரிவேஷம் போட்டு ஊளையிட்டுக் கொண்டு, தம்மைத் புனிதராகவே சதா உலகுக்கு காட்டிக் கொள்ள முனைகின்றனர்.

    குறைந்தபட்சம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அரசியல் நேர்மை என்பதே இந்த புலித் தேசியத்துக்கு கிடையாது என்பதை சதா நிறுவிக் கொள்கின்றனர்.

    முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட வெறியாட்டத்தை, இராணுவம் தாக்குதல் சாhந்ததாக காட்டுகின்ற வகையில் பல தளத்தில் பலரால் கருத்துரைக்கப்படுகின்றது.

    இதில் புலியல்லாத தரப்பும், இதற்குள் தனது அரசியல் நேர்த்திக் கடனை நடத்துகின்றனர்.

    இராணுவ வெற்றி தோல்வி பற்றி மயிர்புடுங்கும் வாதத் திறமை மூலம்,

    தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இனத்துக்கு எதிரான பாரிய குற்றத்தை மூடிமறைத்து ஒரு வம்பு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

    புலிகள் நடத்திய வெறியாட்டம் முஸ்லீம் மக்கள் மீதானது என்ற உண்மையைக் கண்டு கொள்ளாத போக்கு, தமிழ் தரப்பு முழுவதும் இருட்டடிப்புக்குள்ளாகியுள்ளது.

    மெதுவாக ஆனால் காலம் தாழ்த்தியே முஸ்லீம்கள் மீதான புலிகளின் வெறியாட்டமே உண்மையில் நடந்தது என்று ஓப்புக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள், அதன் முழுமையான பரிணாமத்தில் மனித அவலத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு திணறுகின்றனர்.

    மறுபக்கத்தில் முஸ்லீம் மக்களின் எல்லையில்லாத அவலம் சார்ந்த அந்தக் கண்ணீர்க் கதைகளை மீறி, அவை சமூகத்துக்கு புலப்படாத வகையில் சூனியமாகின்றது.

    புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் தொடங்குகின்ற யுத்தத்தை நோக்கி முன்முயற்சிகள், முஸ்லீம் மக்களின் அவலம் மழுங்கடிக்கும் வண்ணம் புதைசேற்றில் புதைக்கின்றது.

    முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு மறுபக்கத்தில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களும் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டனர்.



    continued ....

    ReplyDelete
  19. .

    Saturday, 12 August 2006 20:31

    பொதுவான தாக்குதலில் எதுவெல்லாம் முஸ்லீம் மக்களுக்கு நடந்ததோ, அது தமிழ் மக்களுக்கும் நடந்தது.

    சொந்த வீட்டை இழந்து, தமது சொத்தை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, வீதிகள் தோறும் நாயாக அலைகின்றனர்.

    உண்மையில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்மொழி பேசுவோரின் ஒரு குடிப்பெயர்வே நிகழ்ந்துள்ளது.

    திட்டமிட்ட இனவாத சதியே இதன் பின் நிகழ்ந்துள்ளது.

    திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை இல்லாததாக்கும் வகையிலும்,

    அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக மாற்றுகின்ற நடிவடிக்கையைத் தான்,

    புலிகள் ஊடாக பேரினவாதம் நடத்தி முடித்துள்ளது.

    பேரினவாதத்துக்கு இதை விட வேறு வடிவில் அந்த மக்களை வெற்றிகரமாக சிதைக்க முடியாது.

    புலிகளைக் கொண்டு அதை சிதைக்கின்றனர்.

    இது தான் பேரினவாத்தின் மிகத்திட்டமிட்ட அரசியல்;.

    திருகோணமலை எப்படி சிங்கள இனவாதிகளின் ஆதிகத்துக்குள் சென்றது என்பதை,

    அதாவது அவர்கள் எப்படி பெரும்பான்மை ஆனார்கள் என்ற வரலாற்று ஆய்வில்,

    புலிகளின் குறித்த இனவொழிப்பு நடவடிக்கையும் காரணம் என்பதை இனி வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாது.

    நடப்பது, நடந்து கொண்டிருப்பது வெறுமனே முஸ்லீம் மக்கள் மேல் மட்டுமல்ல,

    தமிழ் மக்களும் திருகோணமலையை விட்டு ஒரு சில நாளில் தெரு நாயைப் போலே ஓட ஒட அடித்து விரடட்ப்படுகின்றனர்.

    வாழவே வழியற்ற ஏழை எளிய மக்கள் தமது வாழ்வியலை இழக்க வைத்ததன் மூலம், திடட்மிட்டு அழித்தொழிக்கப்படுகின்றனர்.

    முஸ்லீம் மக்களை புலிகள் முடிந்தவரை கொள்ளையிட்டனர்.

    அவர்களின் வீட்டுச் சொத்துகளைக் கூட புலிகள் கடத்திச் சென்றனர்.

    புலிகள் அங்கிருந்த வங்கிகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை,

    முடிந்தவரை மக்களையும் கொள்ளையடித்தனர்.


    மொத்தத்தில் இதன் பின்னணியில் புலிகளை வழிநடத்துவதில், ஒரு அன்னிய சதி உள்ளது.

    1985 இல் அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான புலியின் இனவெறித் தாக்குதலை,

    அன்று தாம் செய்யவில்லை என்று மறுத்த புலிகள்,

    பின்னாளில் இந்தியா கூறித்தான் நாம் செய்தோம் என்றனர்.

    இதற்காக புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்று கூறினர்.

    இதே போன்று புலிகளின் மூதூர் தாக்குதலின் பின், அதாவது இதை வழிநடத்துவதில், இனவாத சக்திகளுக்கும் அன்னிய சக்திகளுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்கமுடியாது.

    அந்தளவுக்கு திருகோணமலையில் தமிழ் மொழி பேசும் இரண்டு இன மக்களையும் அடித்து விரட்டிய, விரட்டிவரும் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் இதை உணர்த்திவிடுகின்றது.

    முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய,

    இராணுவம் அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்கின்றது.

    நடந்ததும், நடப்பதும் திருகோணமலையை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அழித்தொழிக்கின்ற ஒரு நிகழ்ச்சியை புலிகள் திட்டமிட்டு தொடங்கி வைக்க,

    அரசு அதை முடித்து வைக்க முனைகின்றது.

    பி.இரயாகரன்
    12.08.2006
    நன்றி: தமிழ‌ரங்கம்..



    SOURCE:http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=180:2006&id=354:2008-04-13-20-34-03

    ReplyDelete
  20. PART 1. LTTE Funding Strategies

    The LTTE initially funded their organization through small scale robberies and extortion such as bank robberies.

    The organization grew the LTTE gained funding through international supporters and a diverse range of criminal activities.

    There is no evidence that shows that the LTTE was funded or supported by the people of Sri Lanka.

    Many Tamils living abroad in countries such as Canada and the United Kingdom support the LTTE economically.

    There are said to be about 800,000 Tamil refugees and expatriates worldwide contributing towards the funding the LTTE.

    Some support the LTTE by choice and others because of extortion.

    LTTE supporters have been caught setting up organizations, disguised as charities and relief funds, whose sole purpose is to raise money for the LTTE.

    There is said to be over 200 front organizations supporting the LTTE globally.

    “In May 2007, two Tamils with connections to the LTTE were arrested in Australia

    for
    raising thousands of dollars in Australia under the pretense of being for charities

    and aid for those affected by the 2004 Asian Tsunami, which killed 35,000 people in Sri Lanka,

    but instead using the money to fund the LTTE”


    Criminal activities include, sea piracy, human smuggling, drug trafficking and gunrunning.

    Sea piracy

    The LTTE is known for hijacking and looting shipments and vessels and killing the crew on board.

    Human smuggling

    The LTTE started smuggling Tamil people to Western countries, such as Canada in order to gain funds.

    The LTTE has been said to charge between $10000 to $40000 USD for a Tamil person to be smuggled to Canada illegally,

    while the usual cost of smuggling is said to be between $20000 to $25000 USD,

    In addition to this people leaving Sri Lanka have to pay an additional few hundred dollars for an “exit visa” issued by the LTTE.

    Those with special skills or wealth have higher charges than ordinary Tamils.

    The LTTE also specializes in passport forgery and in Canada 1990 a passport forgery scheme was uncovered which became official proof of a link between Canada and the LTTE.

    Drug trafficking

    The LTTE’s history in drug smuggling dates back to the 1970s.

    LTTE provided a new way for them to get their drugs to markets all over the world.

    In addition to this the LTTE started trafficking and selling drugs to Western European countries by 1984.

    Tamil heroin smuggling activities have been reported in countries such as Italy, Switzerland, Poland, and France.

    One LTTE operative in France who was jailed there for two years for drug trafficking has been said to became the chief of LTTE international operations.



    The LTTE has a specialized branch called the “KP Branch”, where “KP” stands for its highest level operative, Kumaran Padmanathan.

    This unit is responsible for smuggling weapons, explosives and “dual use” technology for military operations.

    The LTTE carries out international arms trafficking and has its own fleet of vessels.

    The LTTE had a shipping base in Myanmar, but they were forced to leave due to diplomatic pressure.

    However a new base was set up on Phuket Island in Thailand in lieu of the previous.

    Other crimes committed by the LTTE that bring in funds are, credit card frauds conducted in a number of countries such as India and the United Kingdom.

    Similar crimes include counterfeit currency trading.

    ReplyDelete
  21. PART 2. "LTTE stole 130,00 Norwegian Passports and sold some of them to Al Qaeda"


    Liberation Tigers of Tamil Eelam (LTTE) operatives have stolen 130,00 Norwegian passports and sold them to the highest bidders including the terrorists of Al Qaeda.

    "One of them surfaced with 700 of the stolen passports in Thailand and got caught to the police," the Ambassador told J.J. Green, the National Security Affairs Correspondent of the Washington Post Radio.

    Green said due to the easy access of European Union citizens to the United States this could make a real risk for even this country.

    The Radio Station introduced the LTTE as the assassins of the former Prime Minister of India Rajiv Gandhi and friends of the Al Qaeda terrorists of the Middle Eastern notoriety.

    LTTE had employed a corrupt police officer to steal the passports for them and when it sold the passports they also sold them to an Al Qaeda group in Algeria.

    The LTTE was banned in India in 1991

    and the second country they were banned was the United States in 1997, about a decade ago.

    When these countries banned them they simply did it because they realized that the Tamil Tigers behavior was really dangerous to the world.

    He said the proscription of the group was thereafter followed by Canada and the 27 member European Union.


    There were 800,000 estimated Sri Lankan Tamils spread in North America, Australia and Europe.

    Money is being bilked from them using sophisticated methods of extortion.

    He said the terrorist group has forcibly taken over places of worship like Hindu temples to steal money given for charity.

    Narcotic sales,
    credit cards frauds of large scale,

    are some other methods they used to earn money.

    LTTE signed a Ceasefire Agreement in 2002 but soon after the agreement was signed they started showing the insincerity by killing Tamil opponents and continuing with child abductions.

    He said they kept on raising funds using front organization because of the proscriptions in the Western countries.

    He said when the pseudo charity called Tamil Rehabilitation Organization (TRO) was discovered by the Commissioner of Charity in UK they restarted it under the name White Pigeon.

    When White Pigeon was caught they transferred 500,000 sterling pounds to another one called International Tamil Rehabilitation Organization(ITRO).

    Then they were transferred to World Tamil Movement. It was always a name game to siphon off charity money for terror.

    Two teams related to the LTTE have already got caught trying to buy weapons and influence in the US and one team has already pleaded guilty.

    In those sting operations one LTTE team offered one million dollars as bribes to US officials, hoping to get the ban on the group lifted, as one of the expectations.

    In the attempt to buy surface to air missiles and other military equipment to down airplanes 70,000 dollars exchanged hands as initial payments to undercover agents. Those figures would indicate, the kind of money the terrorist group was able to spend.

    Courtesy - Asian Tribune

    ReplyDelete
  22. PART 3. LTTE extortions .

    Apart from being banned as a ruthless terrorist organisation in U.K and many other countries including the 25 nations EU,

    LTTE proxy elements are continuing to extort money at will, despite the enforced anti terrorist law regulations glorifying such acts as a criminal offensive.

    A 25 minutes documentary which penetrated deep into investigating the LTTE paw prints,

    extorting money with sheer intimidations under the very own British regulations against terrorism.

    The documentary clear-cuts that the funding are far from voluntary.

    There have been recent allegations of intimidations, on Tamils by the representatives of the internationally banned LTTE outfit.

    According to the revelations made, parts of the 150,000 strong U.K Tamil community appear increasingly vary towards non-Tamil media.

    In 2001 the British government labelled the LTTE as a terrorist group and banned them.

    Other countries have also followed the same course.

    But now the U.K has made even glorifications of such groups a criminal offensive.

    Every body funding the LTTE could be breaking the law under these law enforcements?

    The British Tamil Association (BTA), has been the fore runner administering and organising fund raising campaigns throughout the diasporas, for a 'final war' that was promised to fight against the sovereign state of Sri Lanka.


    A recent Human Rights Watch report, alleges various degrees of intimidations of British Tamils to make their donations for the cause.

    Most people intimidated by the LTTE fund raisers, who were interviewed, were too scared to compromise their terrifying experiences.

    Following are two interviews conducted with the U.K Tamils who were continuously intimidated by pro-LTTE agents, especially in London.


    A U.K Tamil shop owner, who less feared the LTTE, compromised to reveal the true story behind the terrorist funding in the streets of London.

    Q. The day they came to your shop what happened?

    A. He (LTTE agent) came round the shop with one of the files in his hand. He came as our collector and said I want money; every shop owner gives me money.

    Every one gives me money and you don't give a penny. You give 50,000 pounds; and I said no.
    He said you re-mortgage your house and give the money.

    I said no!

    Q. And did they threaten you?

    A. Yes. He phones three, four times and says I want to kill you.

    Such threats to Tamil people and their much more vulnerable relatives in Sri Lanka seem to have created a culture of fear among the centres of the Tamil community.

    Nirmala Ranasinghe, a former LTTE supporter who had active engagements with the terror outfit since 1982, exchanged her bitter experiences which led her to desert the terror outfit.

    "When I went into the organisation I realized it's not my place. It was totally undemocratic.

    Internal killings, internal killings of cadres had started to happen then itself.

    The LTTE cadres who were challenging the authority were being quietly taken away and finished off."

    A few years later Nirmala's younger sister was killed in Sri Lanka for criticising the Tigers treacherous acts.


    It may be that an alternative voice to the LTTE could only arise abroad.

    "We felt that we could start organising this now to create an alternative Tamil voice to come up, because the LTTE claims to be the sole representative of the Tamil people and we know they are not.

    Because we know both here and in Sri Lanka there are lots of people who are discarding the LTTE.

    Not simply because our family members were murdered, but their behaviour of control, taxation, child abduction, political killings etc... People are fed up; they have had enough!" sighed Nirmala in desperation.

    "I cannot see the LTTE having the political ability to sit down with the state and other political parties and accommodate to work out a solution.


    The people who are in the diaspora continuing to support the LTTE are very irresponsible.

    ReplyDelete
  23. PART 4.
    Jane's intelligence review says
    LTTE controls a portion of Montreal's USD 1b drug trade

    Citing Royal Canadian Mounted Police sources the Jane's Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal.

    The Jane's Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world.

    The LTTE and certain other Tamil militant outfits internationally active at this time were thus able to mobilise the services of a large number of Tamil youth to carry consignments of drugs from Sri Lanka and South India to various destinations,

    It seems likely that, in the initial stages of this refugee flow, lax surveillance procedures and liberal attitude of the authorities in the host countries towards political refugees facilitated the participation of fairly large numbers of Tamil youth in the drug trade.
    To some extent, this has persisted in the Nordic countries.

    "The first major detection of LTTE-linked drug rings in Europe took place in Italy in September 1984, following the arrest of a Tamil courier on his way to Rome.

    Well co-ordinated police search operations resulted in the arrest of about 200 Tamils, most of whom were believed to have constituted a Rome-based narcotic distribution network spread over several Italian cities such as Milan, Naples, Acilia, Cetania and Syracuse, and extending into Sicily.

    The Swiss police, for example, broke up a drug ring - one that was believed to have links with the People's Liberation Organization of Tamil Eelam (PLOTE) rather than the LTTE - engaged in cross-border heroin transactions in Switzerland and France.

    Numerous arrests of Sri Lankan Tamils on drug charges were also reported at this time in Germany, France and the Nordic countries.


    Sri Lanka Tamils still occasionally figure among those associated with the drug trade in Canada.

    A statement released in 1991 by the Sri Lanka High Commission in Canada referred to a report of the Royal Canadian Mounted Police (RCMP),

    according to which a part of the billion dollar drug market of Montreal city was controlled by Sri Lankans, who were sending some of the profits to the LTTE.

    Again, a report prepared in 1995 for the Mackenzie Institute of Toronto estimated (speculatively) that the 134 kilograms of heroin seized globally by various law enforcement agencies from Tamil drug runners .

    Tamil drug runners could be selling around 1,000 kg of heroin a year."

    ReplyDelete
  24. PART 1. விடுதலை புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு

    விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

    ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

    புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

    புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

    எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

    புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

    அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

    ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர்.

    கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர்.

    அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201.

    இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம்.

    குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

    காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

    அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

    முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர்.

    வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர்.

    வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.

    ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர்.

    தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

    மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர்.

    25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.

    வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 250 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

    அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.

    இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது.

    CONTINUED …

    ReplyDelete
  25. இக்பால் செல்வனின் தத்துவ முத்துக்கள்

    //1.நான் காசா மக்களை இஸ்ரேல் கொல்ல வேண்டும் என சொன்னேனா .. ஹமாஸ் அழிய வேண்டும் என்று சொன்னேன் .. //

    யம்மா

    //2.பாலஸ்தீனர் என்ற சொல்லை நான் எனது பதிவில் எங்குமே சொல்லவில்லை .. காசாவை மட்டுமே சொன்னேன் ... ! பாலஸ்தீன மக்கள் அரசாங்கத்தை நான் குறை கூறவே மாட்டேன் .. //
    யப்பா

    //3. ஹமாஸ் காசாவை விட்டு வெளியேறி காசாவை பாலஸ்தீன அரசிடம் ஒப்படைப்பதே அனைவருக்கும் நல்லது.//

    உஷ் இப்பவே கண்ணை கட்டுதே

    நாத்திக முக்காடு போட்டு அலையும் வெறிப்பிடித்த சங்கபரிவாரங்கள்


    ReplyDelete
    Replies
    1. //வெறிப்பிடித்த சங்கபரிவாரங்கள் // இது சங்குவியாபரி இல்லை ஞானஸ்தானம் பெற்ற ஓநோய்ய்ய்

      Delete
  26. PART 2. விடுதலை புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு

    400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும்.

    புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 5000க்கும் அதிகமாகும்.

    மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள்.

    இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள்.

    இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன.

    இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 50 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.

    ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும்.

    ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார். துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.

    அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார்.

    முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார்.

    குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.

    முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள்.

    தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர்.

    இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி, பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர்.

    முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன.

    அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது. ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள்.

    இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.



    CONTINUED ……


    ReplyDelete
  27. PART 3. விடுதலை புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு

    புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள்,

    சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும், புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?


    உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?

    எவ்வாறாயினும்,இத்தகைய குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கி விடாமல், சுயமாகச் சிந்தித்து சொந்த புத்தியுடன் நடப்பதொன்றுதான், இந்தியத் தமிழ் மக்கள், இலங்கையிலுள்ள மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யும் பேருதவியாக அமையும்.

    Source: http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.html

    புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.

    உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்


    வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில், அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில், அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான், இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது.

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை . .


    சொடுக்கி >>>>>>> பகுதி 1. புலி பயங்கரவாத ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. <<<<<<< படியுங்கள்

    சொடுக்கி >>>>> பாகம் 2. புலி பயங்கரவாத முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம். <<<<<<, படியுங்கள்

    சொடுக்கி >>>>>> பகுதி 3. புலி பயங்கரவாத தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்.. <<<<<<<< படியுங்கள்

    சொடுக்கி >>>>>தமிழினத்தையே கேவலப்படுத்தி தலைகுனிய வைத்த தமிழ்ப் பாசிசப் புலிகளின் படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள்.

    எத்தனை குழந்தைகள் பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

    எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

    புலிப்பயங்கரவாதிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 31 பிஞ்சுகள் , 45 ஆண்கள் 28 பெண்கள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

    இதில் மிக வேதனைக்குறிய விடையம் ,முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான்


    CONTINUED ....


    ReplyDelete
  28. PART 4. விடுதலை புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு

    திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.

    கண்களை அகலத் திறந்தவாறு வரலாற்றுப் பாதையில் நடந்து வாருங்கள்.

    தவறிப்போன, நீங்களோ நானோ தவறவிட்ட, மறந்து போன, அல்லது வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து அப்போது தான் எம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

    இலங்கையில் தனி நாடு தமிழ்நாடு கேட்டு போராடிய புலிகளும் மிக அதிகமான போர்க் குற்றங்களை முஸ்லிம்களுக்கு எதிராக செய்துள்ளனர்.


    அசல் பயங்கரவாத அமைப்பான அவர்களின் போர்க் குற்றங்களை சனல் 4 உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

    பயங்கரவாத அமைப்பான புலிகள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

    இங்கு கிளிக்செய்து பார்வையிடவும்
    >>>>
    கொலைவெறி புலிகளின் முஸ்லீம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் = விடியோ) ‍ சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
    <<<<

    உங்களுக்கெல்லாம் முகத்தில் மீசை எதற்கு??

    உன்போன்ற பல அண்ணண் தம்பி அப்பாமார்களின் கண் முன்னாடியே தங்கைகளையும் அக்காக்களையும் அம்மாக்களையும் கதறக் கதறக் கற்பழித்து சுட்டு அக்கிரமம் புரிந்த தற்போது அடையாளமுமில்லாமல் அழிந்து போன புலிகளுக்கு எதிராக என்றைக்காவது இவ்வாறான ஒன்று கூடல் எதிர்ப்புக்களை நடாத்தியிருக்கிறீர்களா??


    இலங்கைக்கு வந்து தமிழ் மக்களிடம் கேட்டாவது இருக்கிறீர்களா? வந்துவிட்டார்கள் போலியான நடிப்பை காட்டுவதற்கு?

    இலங்கையில் பெண்களும் சிறுவர்களும் கதறக் கதற புலிகளால் வேண்டுமென்றெ செல் வைத்து அழிக்கப்பட்ட போது இல்லாத பாசம் இப்போது எங்கிருந்து வந்தது?

    கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்து தென்னை மரத்தில் ஓங்கி அடித்த போது கண்டனம் விடுக்காத கோழைகள்.

    எங்களைப் போன்ற பெண்களை வலுக்கட்டாயமாக சேர்த்து அவர்களை மாசுபடுத்தி ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல் அதனை நிர்வாண வீடியோவாக சர்வதேசம் முழுக்க திரையிட்ட வீரவரலாறு இந்திய இலங்கை தமிழ் சமூகத்தின் பொண்ணான வரலாறு......

    வெள்ளைகார சமூகத்தின் முன் நிர்வான படம் ஓட்டிய வீரத் தமிழனை என்னவென்று வேறு எப்படி பாராட்டுவது தோழா....??

    இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள்

    சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

    ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.


    .

    ReplyDelete
  29. Anonymous16.11.12

    ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையான ஐந்து நாட்களில், ஸ்ரீலங்காப் படையினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோரதாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேசவாழ் மக்களால் என்றுமே மறந்துவிட முடியாது.



    தமிழின உயிர்கொலை நாள் என்று மட்டக்களப்பு வாழ் மக்களால் வேதனையுடனும், அச்சத்துடனும் நீண்டகாலம் நினைவுகூறப்பட்ட இந்த வாரத்தில் மட்டும் சுமார் 700இற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், சிறுவர்கள், குடும்பஸ்தர்கள் என்ற பேதம் எதுவும் இல்லாமல் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்ட இந்தத் தமிழ் உறவுகள் பற்றிய நினைவுகள், ஒவ்வொரு செம்டெம்பர் 5ம் திகதியும் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ் மக்களால் நினைவு கூறப்பட்டு வந்தது.
    1990ம் ஆண்டு ஈழப்போர் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து, மட்டக்களப்புத் தமிழ் மக்கள் மீது அழித்தொழிப்பு யுத்தம் ஒன்றை ஸ்ரீலங்காப் படையினர் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள்.

    ReplyDelete
  30. Anonymous16.11.12

    iqbal selvan is affected by hits-o-pobia disease. don't bother about him.

    ReplyDelete
  31. இதுவரையிலும் தான் நிற்குமிடம் தெரியாவண்ணம் ஒளிந்து நின்று கல்லெறிந்த இ.செ. காசா பிரச்சினையின் வாயிலாக தான் நிற்குமிடம் எது என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார்.

    ReplyDelete
  32. இக்பால் செல்வன் இதை தான் எதிர்பார்த்தான்
    அவன் கிறுத்தனமாக எழுதினால் நாம் எதிர்வினை ஆற்றுவோம் என்று நடந்து விட்டது இப்ப அவனுக்கு மனமகிழ்ச்சி.

    ஒரு வெறுப்பும் இல்லை ஹிட்ஸ் வெறி மட்டுமே ஆரம்பத்தில் இந்து மதத்தை அசிங்கப்படுத்தி எழுதிக் கொண்டு இருந்தான் டோண்டு ராகவன் கூட வந்து எதிர்வினையாற்றினார் இவனின் இறுதி பெயரான இக்பால் என்ற பெயரை பார்த்து விட்டு முஸ்லிம் என்று எண்ணி பிறகு விளங்கிக் கொண்டார் அதுபோன்ற பதிவுகள் ஹிட் அடிக்காமல் முடங்கவே இது போன்ற கிறுக்குத்தனங்களை கையில் எடூக்கிறான் நீங்க மட்டும் கண்டுக் கொள்ளாமல் இருங்கள் ஓய்ந்து விடுவான்

    ReplyDelete
    Replies
    1. //இந்து மதத்தை அசிங்கப்படுத்தி எழுதிக் கொண்டு இருந்தான் டோண்டு ராகவன் கூட வந்து எதிர்வினையாற்றினார்// முஸ்லீம் பெயரில் இந்து மதத்தை திட்டினார் பதிலுக்கு இந்துக்களும் முஸ்லீம்களை திட்டுவார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். நாத்திக போர்வையில் ஒழிந்திருக்கும் பாதி. ஜெரி டோன்ஸ்.

      Delete
  33. உதாரணத்திற்கு இக்பால் செல்வனின் பழைய பதிவுகள்
    குதிரையை புண்ர சொல்லும் இந்து மதம் இப்படி இவன் எழுதியவுடன் டோண்டு ராகவன் இவனை முஸ்லிம் என்று நினைத்து பயங்கரமாக இவனை திட்டாமல் இஸ்லாத்தை திட்டினார்

    ReplyDelete
  34. Anonymous17.11.12

    We should be careful about this muslims, they operate in two ways one as extrimist and other as moderate. Extremist bomb any place and kill even child and tell when it comm to war, we cannot see it is child or adult. At that time moderate muslims will not say anything about their brothers' atrocities. when something happens, police or comondo take any action agains these terrorist they will start cry of human rights violations. They simply forget Gothera Train burning incident that only lead to killing of muslims in gujarath.so it is no wonder they support Hamas terroist in Palastine. Every country should be like Isrel, they should give pain for pain, killing for killing and they should treat terroist with their own medicine. I still see muslims in india support pakistan, when pakistan beat india in cricket they fire crackers. i have personally seen it. they live here peacefully but Can Indians live like that in pakistan. Can you mention any religious freedom in muslim countries. So We should be aware some of this muslims.

    ReplyDelete
  35. இங்கே கருத்துச்சொல்ல முழு சுதந்திரம் உண்டு அணானிகள் உட்பட.. நாகரீகமான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி கருத்துச்சொல்லுங்கள், யாரையும் திட்டும் வகையிலோ தரக்குறைவாகவோ கருத்திட்டால் அவை நீக்கப்படும்!

    ReplyDelete
  36. Iqbal Selvan is MF, dont read his blog, usually he witters against Hindu god, he doesn’t has any kind of knowledge on anything, already I hurt reading his blog, we can file complaint about this, he doesn’t has any rights to play with others feeling, as per Indian Cybercrime law 477.3, you can send report. He is biggest stupid GAY.

    ReplyDelete
  37. Anonymous19.11.12

    இக்குபாலு செலுவன் கூலிக்கு மாரடிக்கும் செக்குமாடு என்றும் மிசினரியால் நேர்ந்து விடப்பட்டவர் என்றும் முஸ்லிம்கள் மேல் மற்றவர்கள் கல்லெறிய சூழ்ச்சி செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர் என்றும் கேள்விப்பட்டேன். இது வதந்தியா? உண்மையா?

    ReplyDelete
  38. Anonymous21.11.12

    Are all muslims terrorists or only a few?

    ReplyDelete
  39. Anonymous2.6.13

    non-alcoholic fatty liver disease and the statins treatment non-alcoholic fatty liver disease and the statins treatment non-alcoholic fatty liver disease and the statins treatment

    Here is my web page treatment fatty infiltration of liver

    ReplyDelete
  40. Anonymous2.6.13

    home remedy rosacea bumps

    Here is my site ... rosacea doctor Hicks

    ReplyDelete

Drop Anything