மோக முள்ளும் கண்ணம்மாக்களும்.!

காமமும் மோகமும் ஆச்சாரமோ அனுஷ்டானமோ பார்ப்பதில்லை.. உள்ளுக்குள் பூட்டி பூட்டி வைத்த உணர்ச்சிகள் தடைமீறி வெளிக்கிளம்பும் போது வெட்கங்களால் அவற்றை தடுக்க முடிவதில்லை!! அண்மையில் மோக முள் திரைப்படம் பார்த்தபோது மனதில் எழுந்தவை இவை..

மோகமுள் திரைப்படத்தில் முதன்மை பாத்திரங்கள் யமுனா-பாபு, இதுதான் நிறைய பேருக்கு பிடித்திருந்தது.. எனக்கும் பிடித்திருந்தது, ஆனால் அதைவிட கிளைக்கதையாக வயதானவருக்கு மனைவியாக வரும் "கண்ணம்மா"
பாத்திரம்தான் மனதை ஏதோ செய்துவிட்டது.. படம்பார்த்து முடிந்தும் இரண்டு மூன்று நாட்களாக அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.. 

குடும்ப வறுமை காரணமாக வயதான ஒருவருக்கு இளமையான, அழகான கண்ணம்மா துனைவியாக்க படுகின்றால்.. அங்கே அவளுக்கு பொண்ணும் பொருளும் குறைவின்றி வாங்கிக்கொடுக்கிறார்.. ஆனால் ஒரு பெண்ணுக்கு இது மட்டும் போதுமா? அவள் உடல் உளத்தேவைகளை பற்றி அந்த வயதானவருக்கு கவலையில்லை, உண்டவுடன் உறங்கிவிடுகிறார்.. வெளியில் போகும்போது உள்ளே வைத்து பூட்டி வைத்துவிட்டு போய்விடுகிறார்.. உலகெங்கிலும் எங்கோ ஓர் மூலையிலாவது இது போன்ற நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன..!!

இதன் போதே பக்கத்து வீட்டு மேல்மாடியில் வசிக்கும் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது கண்ணம்மாவுக்கு..  தனக்குள் எறிந்து கொண்டிருக்கும் உணர்ச்சி தீயை அனைக்க பாபுவை விட்டால் வேறு வழி தெரியவில்லை கண்ணம்மாவுக்கு.. ஒருநாள் இரவு பாபு தனிமையில் உறங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென அவன் அறையில் நுழைந்தவள் அவனை தடாலடியாக கட்டிபிடித்து அவனுடன் உறவு கொள்கிறால் அவனுக்கு அதில் இஷ்டமில்லாமல் ஆரம்பத்தில் மறுத்தாலும், இறுதியில் அவனால் அவளை விலக்க முடியாமல் அவளுடன் ஒத்துப்போகிறான்!!

இந்தப்படம் பார்க்காதவர்கள் இங்கு நான் குறிப்பிட்டவற்றை ஏதோ மலயாள பிட்டுபட ரேஞ்சிற்கு கற்பனை செய்தால், அது தவறு..! காரனம் படம் பார்க்கும் போது எந்த விரசமும் அதில் தெரியவில்லை. கண்ணம்மாவின் செய்கைகளை நியாயபடுத்த முடியாவிட்டாலும் அவளின் மீது ஒரு பரிதாப உணர்வு ஏற்படுகிறது.. அதுவே அந்த பாத்திர படைப்பினதும் படத்தினமும் வெற்றி.. இந்தப்படத்தின் கதையுடைய நாவலை படித்தவர்கள் படத்தைவிடவும் நாவல் சிறப்பாக இருக்கிறது என சொல்லக்கேட்டுள்ளேன்.. நான் நாவல் படிக்கவில்லை படம் மட்டும்தான் பார்த்தேன்..

பிறகு இன்னுமொரு நாள் அதேபோல் கண்ணம்மா பாபுவின் படுக்கையறைக்கு வருகிறால் அப்போது கதவை பூட்டிவிட்டு உள்ளே அவன் உறங்குவதை அவதானிக்கிறால்.. அவளை உள்ளே அனுமதிக்கும்படி வேண்டுகிறால், இம்முறை அவன் அனுமதிக்கவில்லை.. அது தப்பு என்கிறான். தொடர்ந்தும் அவள் விடவில்லை கதவை திறக்கும்படி கெஞ்சிக்கேட்கிறாள்..(ஒரு பெண் எதற்கு வேண்டுமானாலும் கெஞ்சலாம், ஆனால் தன் உடல் பசியை தீர்த்துக்கொள்ள ஒரு ஆணிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படுவது மிகக்கொடுமையாகும்!!!) இருவரும் வேறு எங்காவது போய் வாழலாம் என்கிறாள், என்னிடம் எல்லா தைரியமும் இருக்கிறது நீ என்னுடன் கூட வந்தாலே போதும் என்கிறாள்.. அவன் இறுதிவரை முடியாது என வீராப்பாகவே இருந்துவிடுகிறான்.. அவளும் அழுகையுடன் சென்றுவிடுகிறாள்.

பிறகு என்ன நடந்திருக்கும்...? ஊகிக்க முடிகிறதா!! வேறென்ன அவள் தற்கொலை செய்து கொள்கிறால்!! யார் காரணம் அவளின் முடிவிற்கு..? இன்னுமொர் திரைப்படம் பார்த்தேன் அது பூட்டான் படமான Travellers and Magicians ஒரு கிராம சேவக அதிகாரி அமெரிக்க செல்ல ஆசைப்பட்டு அவன் கிராமத்திலிருந்து நகரத்துக்குச்செல்ல பஸ்ஸுக்காக காத்திருத்தலும் அவ்வேளையில் அதனூடே சந்திக்கும் மனிதர்களை பற்றிய கதை இது..

அப்போது அங்கு வந்து சேரும் துறவி ஒருவனின் கதை கிளைக்கதையாக விரிகிறது.. அப்போது ஒரு மலைக்கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் ஒரு வயதானவரும் ஒரு அழகான இளம்பெண்ணும் வசிப்தாக காட்ட்ப்படுகிறது.. அந்த வயதானவருக்கு அந்த பெண் எல்லா பணிவிடைகளும் செய்கிறால் உடம்பு தேய்த்து குளிப்பாட்டி விடுவதில் தொடங்கி சமைத்து பரிமாறுதல் வரை அனைத்து வேலைகளையும் செய்கிறாள்..ஆரம்ப காட்சிகளை நோக்கும்போது தந்தை மகள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன் பின்புதான் தெரியவந்தது அந்த வயதானவரின் மனைவிதான் அந்த பெண் என்று.. என்ன கொடும சரவணா!!

நான் முன்பு கண்ணம்மா விடயத்தில் சொன்னது போன்று இவளுக்கும் எந்த உடல் சுகத்தையும் அந்த கிழவனால் கொடுக்க முடியவில்லை.. (என்ன மயிருக்குடா உங்களுக்கு கல்யாணம், அதுவும் இது போன்ற இளம் பெண்களோட என அந்த வேளையில் திட்டாமல் இருக்க முடியவில்லை)
அப்போது அங்கே அந்த வயதானவருடன் சேர்ந்து மலைக்கு சென்று வேலை செய்ய அங்கே ஒரு இழைஞனும் இருக்கிறான்... பின் என்னவாகிருக்கும் அந்த இழைஞனுக்கும் அவளுக்கும் காதல், அவர்களுக்குள் கள்ள உறவும் ஏற்படுகிறது..

பின் இருவரும் ஓடிப்போக தீர்மானிக்கிறார்கள்.. அப்போ கிழவனை என்ன பண்ணுவது,  அவனுக்கு விஷம் வைத்து கொல்ல முடிவு செய்கிறார்கள்..
அப்பிடியே ஒருநாள் கிழவனுக்கு வைத்த சாப்பாட்டில் விஷத்தை கலந்துவிட்டு ஓடிப்போக தயாராகிறார்கள்.. அப்போது அவன் மனசில் ஒரு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது ஒரு உயிரை கொன்றுவிட்டோமே என.. பின் அவளை விட்டுவிட்டு அவன் வெளிக்கிறம்புகிறான்..அடப்பாவி!! என்னையும் அழைத்துச்செல் என அவன் பின்னாலயே அவளும் ஓடி வருகிறாள் வரும்வேளையில் அவள் ஆற்றில் விழுந்து இறந்து போகிறாள்.. இப்போது இரண்டு உயிர்களை கொன்ற குற்றவுணர்ச்சி.. பின் என்னவாகிறான் அவந்தான்  அந்த துறவி.. அந்த பெண்ணை கிழவனோடவும் வாழல்ல  அவனும் அழைத்துச்செல்லல்ல ஆசை காட்டி ஆற்றில் விட்டுவிட்டான்..

இந்த இரு திரைப்படங்களின் இரு பெண்களும் ஒரே மனநிலையோடு  உடல் உணர்ச்சிகளை மறந்து வாழ்ந்தவர்கள்.. அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு இறுதியில் இறந்தும் போகிறார்கள்.. உலகில் இவ்வாறு  இன்றும் ஒவ்வோர் இடங்களிலும் நடந்துகொண்டுதானிருக்கிறது,,

Post a Comment

4 Comments

  1. சிறப்பான அலசல்!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  2. நல்ல அலசல்..

    ReplyDelete
  3. வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
    தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. 
    - இணையுரு (WebFont)  என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
    - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
    - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
    - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
    என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.  
    தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
    சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
    இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html 
    இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை 
    1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
    2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053

    (அல்லது)
    1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html 
    2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html  

    மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.

    நன்றி மற்றும் வணக்கம்
    ராஜு.சரவணன்  

    ReplyDelete

Drop Anything